டிசம்பர் 05, 2017

இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி …


இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி …
(பகுதி - 1)

உலகில் வாழும் மக்களில் பெரும்பாலானோர் கடவுளைப்பற்றி அறிகிற அறிவில், அறியாமை என்கிற இருளில் வாழ்ந்து வருகின்றனர். பற்பல தெய்வங்களை வணங்கி உண்மை கடவுளை அறியாமலே இருளில் வாழ்ந்து ஆக்கினைக்குள்ளாகின்றனர். தேவனுடைய ஜனங்களோ வெளிச்சத்தின் பிள்ளைகள் என்று வேதம் கூறுகிறது. 1தெசலோனிக்கேயர்: 5:5 – “நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்;…”. நாம் வெளிச்சத்தின் பிள்ளைகளானபடியால் இருளில் இருக்கிற ஜனங்களை நாம் பெற்றுள்ள வெளிச்சத்தை இருளிலிருப்போரும் பெற்றுக்கொள்ள ஒளியினிடத்தில் ஒளியாகிய இயேசுவினிடத்தில் வழிநடத்த கடமைப்பட்டுள்ளோம்.

ஏனென்றால், 2கொரிந்தியர்: 4:4 – ல் – “தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். என்று வேதம் கூறுகிறபடியால், அறியாமையின் இருளிலிருக்கிறவாகளின் மனதில் உள்ள குருட்டாட்டத்தை நீக்கிட, 2தீமோத்தேயு: 4:2 – ன் படி, - “சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு” என்ற அப்.பவுலின் ஆலோசனைப்படி சுவிசேஷத்தை அறிவிப்போமாக.

எந்தெந்த வழிகளில் சுவிசேஷத்தை அறிவிக்க இயலுமோ, அந்தந்த வழிகளில் தவறாமல் அறிவித்திட முனைவோமாக. அனைத்துத்தரப்’பினரும் மனந்திரும்பி இரட்சிக்கப்பட ஏதுவாக, அவர்களைப் பிடித்திருக்கிற குருட்டாட்டம் நீங்கிட ஜெபத்துடன் அணுகுவோமாக. இரட்சிப்படையாதோர் மனதில் ஏராளமான இருளையும், குருட்டாட்டங்களையும் இப்பொல்லாத பிரபஞ்சத்தின் தேவனாகிய சாத்தான் கட்டி வைத்துள்ளான். அக்கட்டுகளை அறுக்க ஆவியானவர், நாம் எடுக்கும் எல்லா முயற்சிகளையும் தேவனாகிய கர்த்தர் ஆசீர்வதிப்பார்.

இருளின் வகைகள்:

யோபு: 16:16 – மரண இருள்; // ஏசாயா: 60:2 – காரிருள் (மூடநம்பிக்கை); // பிரசங்கி: 11:8 – இருளின் நாட்கள் (இரட்சிக்கப்படாத நாட்கள், இரட்சிப்பை இழந்த நாட்கள்); // கொலோசெயர்: 1:13 – அந்தகார இருள்; // லேவியராகமம்: 5:17 – அறியாமை இருள்; // லேவியராகமம்: 4:27 – பாவ இருள்; // எபேசியர்: 4:18 – புத்தியில் அந்தகார இருள்; // 1பேதுரு: 1:14 – இச்சையின் இருள்; // ஆதியாகமம்: 1:2 – ஆழமான இருள்.

இத்தனை வகை இருளும் ஒரு மனிதனை பிடித்தால் அவன் குருட்டாட்டம் பிடித்தவனாயிராமல் பின்னர் எப்படி இருப்பான்?! இந்த அத்தனை இருளையும் சாத்தான் மனிதனுடைய மனதின் ஆழத்தில் கொண்டுபோய் ஒளித்தும், மறைத்தும் வைத்தபடியினால்தான் அநேகர் இரட்சிக்கப்பட முடியாமல் அது தடையாக இருக்கிறது. இதைத்தான் வேதம் ஆழமான இருள் என்கிறது (ஆதியாகமம்: 1:2 – ஆழமான இருள்). இருளின் ஆதிக்கத்தையும், அதைப்பற்றிய தெளிவையும் அறிந்திருக்கிற நாம், இருளை விட்டுவிலகி, வெளிச்சத்தில், ஒளியில் வாழ்ந்து வருகிறோம். நாம் எப்படி இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வந்தோமோ… அதேபோல பிறரையும் வெளிச்சித்தில் கொண்டுவர பாரமெடுக்க வேண்டும். நமக்காக யாரோ ஒருவர் பாரமெடுத்தபடியினால் இன்று வெளிச்சத்தின் பிள்ளையாக இருக்கிறோமே!

ஒவ்வொரு மார்க்கத்திலும் ஒவ்வொரு இருளும், கட்டுகளும், அறியாமையும் காணப்படும். பாரம்பரிய கட்டுகள், சமுதாய கட்டுகள், குடும்ப கட்டுகள், மனதின் கட்டுகள், வம்ச கட்டுகள் காணப்படும். அது இரட்சிப்பிற்கு தடையாக இருக்கின்றன. அக்கட்டுகள் அவர்கள் நித்திய ஜீவனை அடைய எவ்விதம் தடையாக உள்ளது என்பதை அறியச் செய்தல் அவசியமாகிறது. ரோமர்: 10:14,15 – “அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்? அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே.”.

இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி நாம் நடக்கையில்… இன்னொரு சாரார், இருளிலிருந்து கொண்டு இருளுக்கு அழைக்கிறவர்கள் உண்டு. அப்படிப்பட்டவர்களை நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா?! ஆம்! பிரியமானவர்களே … இக்கடைசி நாட்களில் வெளிச்சத்தின் பிள்ளைகளையே இருளுக்குள் நடத்திவிடுகிற இருளின் பிள்ளைகள் இவ்வுலகில் உண்டு. அவ்விருளை அவர்கள் ஒளியாக கருதி வீணான நம்பிக்கை வைப்பதினால்தான் இப்படி நடந்து கொள்கிறார்கள். இருளிலிருந்து கொண்டும், இருளுக்கு அழைக்கிறவர்களிடம் இருந்து உங்களையும், உங்களைச் சார்ந்தவர்களையும் காத்துக்கொள்ளத் தவறினால் இருளின் ஆதிக்கத்தில் அடிமைப்பட வேண்டியதாகி விடும். அதற்காகவே இப்பகுதியில் “இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி” என்கிற தலைப்பின் கீழ் இக்கட்டுரை எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

அதுமட்டுமல்ல, இன்று அநேக கிறிஸ்தவ வாலிபர்களை வாலிபப்பிள்ளைகளை குறிவைத்து, இருளிலிருப்போர் இருளுக்குள் நம் பிள்ளைகளை அழைத்துச் செல்வதை அங்கொன்றும் இங்கொன்றுமாக, கிறிஸ்தவ குடும்பங்களிலும், கிறிஸ்தவ சபைகளிலும் தீவிரமாக இவர்கள் செயல்படுவதை பார்க்கிறோமே! கிறிஸ்தவ குடும்பங்களிலும், கிறிஸ்தவ சபைகளிலும் இதைக்குறித்து ஒரு சரியான விழிப்புணர்வு இல்லாததே காரணம். இருளிலிருப்போர் எப்படி நம்மவர்களை அணுகுகிறார்கள் என்பதையும்? அவர்கள் எப்படிப்பட்ட சந்தேகங்களை நம் மனதில் ஏற்படுத்துவார்களென்றும், நமது விசுவாசத்தை எப்படி அவிசுவாசப்பட வைப்பார்கள் என்றும் நாம் நன்கு அறிந்திராவிட்டால் நாம் வஞ்சிக்கப்பட வாய்ப்புண்டு. இக்கட்டுரையை மிக கவனமாக பொறுமையோடு வாசித்து உங்கள் குடும்பங்களிலும், உங்கள் சபைமக்களையும் காத்துக்கொள்ள விழிப்போடு இருக்க தயவாய் கேட்டுக் கொள்கிறேன்.

ஆதியாகமம்: 2:15 – “தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்கொண்டு வந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்”. உன்னதப்பாட்டு: 1:6 – “ என்னைத் திராட்சத்தோட்டங்களுக்குக் காவற்காரியாக வைத்தார்கள்; என் சொந்தத் திராட்சத்தோட்டத்தையோ நான் காக்கவில்லை. ஒரு குடும்பத்தில் உள்ள குடும்பத்தலைவனும், தலைவியும் அக்குடும்பத்திற்கு உக்கிராணத்துவம் உடையவர்கள். அந்தப் பொறுப்பை சரியாக கவனியாவிடின், அக்குடும்பத்தில் உள்ளோரை ஆவிக்குரிய வாழ்வில் இருந்து இழக்க வேண்டி வரும். 

1பேதுரு: 5:6 – “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்”.

இருளிலிருப்போர் இருளுக்குள் அழைக்க உபயோகப்படுத்தும் உபகரணங்கள்:

1.   நமது வேதம் திருத்தப்பட்ட வேதமென்றும், விஞ்ஞானத்தோடும், பகுத்தறிவோடும், சரித்திரத்தோடும் ஒத்துப்போகாது என்றும் சொல்வார்கள்.
2.   வேதத்திலிருக்கிற வசனங்களைக் கொண்டே, நாமே சந்தேகப்படும்படியாக, அவிசுவாசப்படும்படியாக வசன ஆதாரங்களோடு கணைகளை வீசுவார்கள்.
3.   பரிசுத்தவேதம் என்றால் உன்னதப்பாட்டு புஸ்தகத்தில் கடவுள் இப்படியெல்லாம் எழுதுவாரா? என்பார்கள்.
4.   இயேசு, “தான் கடவுள்” என்று எப்போதாவது வேதத்தில் சொன்னாரா? இயேசு ஒரு தீர்க்கதரிசியே தவிர கடவுள் அல்ல என்பார்கள்.
5.   இயேசு மரிக்கவில்லை. அவர் மயக்கமாயிருந்த போதே காஷ்மீர் பக்கம் கொண்டுபோய் விட்டார்கள். அங்கே அவர் பிள்ளைகுட்டிகளோடு வாழ்ந்து மடிந்துபோனார் என்றும் அவர் குடும்பம் நடத்திய வீடு இதுதான் என்று பனி நிறைந்த பகுதியில் உள்ள ஒரு மரவீட்டைக் காண்பிப்பார்கள்.
6.   மரணித்தவர்கள் மரணத்தை ஜெயிக்க முடியாது என்றும், மீண்டும் வர முடியாது என்றும் அவர்கள் நம்பிக்கையை நம்மிடம் தீவிரமாக வலியுறுத்துவார்கள். மரணத்தை வெல்ல ஒருவருக்கும் வலிமை கிடையாது என்பார்கள்.
7.   வேதத்தில் உள்ள இஸ்மவேல் நாங்கள் தான் என்றும், அடிமைப்பெண்ணான சாராளுக்கு பிறந்தவன் இஸ்காக் (அதாங்க ஈசாக்கு) என்றும், இப்ராஹிமிற்கும்(ஆபிரகாம்) அவனது மனைவி ஆகாருக்கும் பிறந்தவன் இஸ்மவேல் என்றும் சொல்லுவார்கள்.
8.   உபாகமம்: 18:15 – “உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.” என்கிற வசனத்திலிருந்து சொல்லப்பட்ட அந்த தீர்க்கதரிசி முகமதுநபி தான் என்றும் வலியுறுத்துவார்கள்.

9.   பிசாசு உலகில் இல்லையென்றும், அதைத் துரத்திவிட தேவையில்லையென்றும், அப்படியே அதைத்துரத்தி விட்டாலும் கர்த்தருடைய நாமத்தையோ அல்லது இயேசுவின் பெயரையோ உச்சரிக்க வேண்டிய தேவையில்லை என்பார்கள்.

இதுபோன்ற இன்னும் பற்பல சந்தேகங்களை எழுப்பத்தக்க வகையில், கேட்கின்ற நபர்களுக்கு ஏற்ப, கேள்விக்கணைகளைத் தொடுப்பார்கள். இவைகளை மேற்கொள்ள முதலில் தேவஜனமாகிய நாம், வேதத்தை கருத்தாய் வாசித்து சத்தியத்தை நன்கு அறிந்தவர்களாய், விசுவாசத்தில் உறுதியோடும் இருக்க வேண்டும். 

2தீமோத்தேயு: 2:25,26 – எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும், பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்”.

சமீப நாட்களில் ஒரு வாலிபப்பிள்ளையை இப்படிப்பட்டவர்கள் பேச வைத்து அதை இணையதளங்களில் காணொளி காட்சி வெளியிட்டிருந்தார்கள். அதில் பேசும் அந்த வாலிபப்பெண், “தான் ஒரு கிறிஸ்தவ சபை போதகருடைய மகள் என்றும், தன்னுடன் படித்தவர் இயேசு வேதத்தில் ஒரு இடத்தில்கூட தன்னை கடவுள் என்று கூறவில்லை, அப்படியிருக்க, அவரை கடவுளாக தொழுதுகொள்வது தவறில்லையா? எனக் கேட்டாரென்றும், தான் அதை உறுதிப்படுத்திக் கொள்ள பைபிளை வாசித்து முடிவு சொல்கிறேன்” என்றாராம். பைபிளை வாசித்தபோது அவருக்கு ஆச்சரியமாயிருந்ததாம். ஏனென்றால், ஒரு இடத்தில்கூட அவர் சொன்னதுபோல இயேசு தன்னை கடவுளாக சொல்லவில்லையென்று கண்டறிந்தாராம். அதுமுதற்கொண்டு, இயேசு தெய்வமில்லையென்றும் சொல்லி மதம் மாறி முஸ்லீமாக தன்னை மாற்றிக் கொண்டு, ஒரு முஸ்லீம் வாலிபரைத் திருமணம் முடித்து கொண்டாராம்.

ஒரு ஆவிக்குரிய போதகருடைய பிள்ளை இரட்சிக்கப்பட்டிருந்தும், வேதவாசிப்பும், சத்தியத்தை அறிகிற அறிவும் இல்லாததினால் பின்மாற்றம் அடைந்திருப்பதைக் கண்ட அநேகர் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தார்கள். அதுமட்டுமல்ல… அநேக விசுவாச பிள்ளைகள் வாலிப சகோதர சகோதரிகள் இப்படி பின்மாற்றமடைந்தவர்கள் ஏராளம். அனுதினமும் செய்தித்தாள்களிலும், முகநூலிலும், யு டியூப் காணொளி காட்சிகளிலும் பார்த்து வருகிறோம். 

இனியும் இதுபோன்ற சத்தியமறியாதவர்களாகவும், வேதம் வாசியாதவர்களாகவும், ஆவிக்குரிய வளர்ச்சியில்லாதவர்களாகவும் இராதபடி, நம் பிள்ளைகள்மேல், பெற்றோர்களும், போதக பிதாக்களும் சற்று அதிக கவனம் செலுத்தி பொறுப்பெடுக்க முன்வரும்படி மிகத் தாழ்மையுடன் தயவாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

சமீபத்தில் இணையதளத்தில் ஒரு இஸ்லாமிய நபர் ஒருவருடன் கருத்துப்பரிமாற்றம் (முகநூலில் - தி இந்து - நாளிதழ்) எதிர்பாராமல் நடந்தது. அவர் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு நான் கொடுத்த பதில்கள் அநேக தேவபிள்ளைகளுக்கு பயன்தரும் வகையில் இருக்கும் என்பதினால் கீழே அதை பதிவிடுகிறேன். யோவான்: 8:32 - "சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்". இவ்வசனத்தின்படி நமது  விசுவாசப்பிள்ளைகள் - இருளின் பிள்ளைகளுக்கு பதில் சொல்லி, அவர்களை இரட்சிப்பிற்குள் நடத்துங்கள். அல்லது உங்களையாவது உங்கள் ஆத்துமாக்களையாவது காத்துக் கொள்ளுங்கள். என்னோடுகூட சகோ.தேவகுமார் என்பவரும் இணைந்து பதிலுரைத்தார். இயேசு, தான் கடவுள்தான் என்பதை நிரூபிக்கும் வசன குறிப்புகளை சகோ.பென்னி அவர்கள் வெளியிட்ட பதிவையும் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் இருவருக்கும் இயேசுவின் நாமத்தில் எனது வாழ்த்துக்களை இதன் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன். கர்த்தர் அவ்விருவரையும் ஆசீர்வதிப்பாராக.

முகநூலில் பகிர்ந்து கொண்ட கருத்துப் பரிமாற்றம்:

TAMIL.THEHINDU.COM
Top of Form

Comments
Charles MC

Esakki Muthu
Esakki Muthu ஒரு காலத்தில் இஸ்ரேல் என்ற நாடே இல்லாமலிருந்தது பாலஸ்தீனம் மட்டுமே .உலக மத அரசியலின் அழுத்தம் காரணமாக பாலஸ்தீனம் மத ரீதியாக துண்டாடப்பட்டது இருநாடுகளும் நிரந்தரப்பகைநாடானது இப்போது பாலஸ்தீனத்தை அழிக்கவே ஜெருசலேமை தலைநகராக்க முயற்சிக்கிறார்கள் .
ராம ராஜன்
ராம ராஜன் அப்படியே இந்தியா பாகிஸ்தான் பிரிவினைகதை தான்...
Charles MC
Charles MC ஆறாயிரம் ஆண்டுகள் சரித்திரம் படைத்த தொன்மை வாய்ந்த நாடு இஸ்ரேல். அது கடவுள் யூதர்களுக்கு வாக்களித்துக் கொடுத்த தேசம். அதன் தலைநகரம் எருசலேம். அதன் பழமையை அறிந்துபேசும் அதிபர்.டொனால்ட் ட்ரம்பிற்கு எனது வாழ்த்துக்கள்.

நசீர் அஞ்சன்
நசீர் அஞ்சன் Charles MC கடவுளாள் சபிக்கப்பட்ட ஒரே இனம் யூத இனம் அதுவும் எங்களுக்கு தெரியும், ஏசு நாதரை கொல்ல முயன்ற பாவிகள் என்பதும் தெரியும்... சரித்திரம் என்பது வேதத்தில் இருத்து பேசுவதல்ல அதுவும் தெரிந்து கொள்ளுங்கள்.
Deva Kumar
Deva Kumar சகோ நசீர் அஞ்சன் வேதாகமம் போல சரித்திர புஸ்தகம் உலகில் ஏதாவது உண்டா ஆதாம் முதல் முதலாம் நூற்றாண்டுவரை முழு சரித்திரமே அடங்கி இருக்கிறது
محمد نعمة اللة
محمد نعمة اللة சகோ. தேவா..நான் மத ஒப்பீடுசெய்யும் மாணவன் எனக்கு பைபிளை பற்றி விளக்குங்கள் ..plz

Charles MC
Charles MC நசீர் அஞ்சன்கடவுளால் சபிக்கப்பட்ட இனமல்ல அது. கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட இனம். "இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம்" என்று வேதம் சொல்கிறது. அதுமட்டுமல்ல, இயேசுவை கொல்ல முயன்றவர்கள் அல்ல. கொலை செய்தவர்கள் யூதர்கள். அதை மறுக்கவில்லை. மறுக்கவும் முடியாது. யூதர்கள் வழியாகத்தான் முழுஉலகிற்கும் இரட்சிப்பு இயேசுகிறிஸ்து மூலமாக உண்டானது. சகோ.தேவகுமார் சொன்னதுபோல ... ஆதாம் முதல் - முதலாம் நூற்றாண்டுவரை முழு சரித்திரத்தையும் உள்ளது உள்ளபடி சொல்லும் உண்மைச் சரித்திர புஸ்தகம் பைபிள் என்று சொல்லக்கூடிய பரிசுத்த வேதாகமத்தைத் தவிர வேறில்லை என்பது பல காலகட்டங்களில் பல்வேறு தொல் பொருள் ஆய்வாளர்கள் மூலம் நிரூபிக்கப்பட்ட ஒரு உண்மையாகும். சரித்திரம் என்பது வேதத்தில் இருந்து பேசப்படாவிட்டால் உண்மை உலகிற்கு விளங்காமலே போய்விடும். மக்கள் அறியாமையிலேயே மூழ்கிக்கிடக்க வேண்டியதுதான். சரித்திரம் மட்டுமல்ல. உலக சிருஷ்டிப்பு, உலகில் பல்வேறு பாஷைகள் தோன்றிய சரித்திரம், மனிதனின் வீழ்ச்சி, மீட்பு, மறுமை , கிறிஸ்துவின் இரண்டாம் வருகை, உலக முடிவு போன்ற அனைத்தையும் வெளிப்படுத்தும் உண்மை புத்தகம் இது மட்டுமே என்பதனை தாங்கள் அறிந்திடுக. நன்றி.

நசீர் அஞ்சன்
நசீர் அஞ்சன் Charles MC பைபில் இறைவேதம் ஆனால் அது பிறகு மனிதர்களாள் மாற்றப்பட்டு புனிதத்தை இழந்து நிற்கிறது உங்களிடம் விவாதம் செய்ய நிறை பாய்ன்ட் உள்ளது ஆனால் அதையெல்லாம் உங்களாள் ஏற்றுக்கொள்ளவே முடியாது

உதாரணத்திற்கு உலகம் பரந்து விரிந்த சம பகுதி என்று பைபிலில் மாற்றம் செய்யப்பட்டது எதற்கு அக்கால மக்களின் அறிவியல் அப்பொழுது அது அப்படி அதனால் பலரை ஈர்க்க செய்யப்பட்ட மாற்றம் பிற்காலத்தில் அதே மாற்றத்தால் உலகம் உருண்டை என்ற கலிலியோவின் கூற்று கடுமையாக விமர்சித்து, சபிக்கவும் செய்தது கத்தோலிக்க திருச்சபை ஆனால் கலிலியோ கூற்றெ சரியென நவீன விஞ்ஞானமும் உறுதி செய்தது ஆனால் இன்றோ உங்களின் பைபிள் மாற்றம் திரும்பவும் மாற்ற முடியாது ஆனால் என்றுமே யாருக்காவும் புனிதத்தன்மை மாறாமல் குர்ஆன் இன்றும் 100% நவீன அறிவியலுடன் முழுமையாகவே ஒற்று போகிறது

அது போல் ஈஸா (அலை) அவர்கள் தன்மை எப்பொழுதும் கடவுள் என்று கூறவே இல்லை.. அவர் தன்னை கடவுளின் தூதுவராகத்தான் முன்னிருத்தினார் ஆனால் நீங்களோ அவரை கடவுளாகவே ஏற்றுள்ளீர்கள்.

ஈஸா (அலை) அவர்களின் மறு வருகையில் அதிக அதிகமாக நம்பிக்கையுள்ளவர்கள் முஸ்லீம்களே... அவர்கள் தங்களுக்கு எந்த ஆதரவும் இன்றி அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு எதிரிகளின் படை சூழும் போது இறைவன் புறத்திலிருந்து உதவியாக அவரின் மறு வருகை இருக்கும் ஏனென்றாள் அவர் மரணிக்கவில்லை மரணம் வந்தவர்கள் உலகில் மறுபடியும் வர முடியாது அது அனைவருக்கும் பொருந்தும். அது போல இன்று உலகில் மிக மிக மோசமாக பாதிக்கப்பட்டு , எதிரிகளாள் கடுமையான பாதிப்புக்குள்ளாகின்றவர்கள் யாரேன்று அனைவருக்கும் தெரியும்.

இன்னும் விவாதிக்க வீடியோ லிங்குகளையும் கொடுக்க முடியும்...

Charles MC
Charles MC நசீர் அஞ்சன்அவர்களே - நீங்கள் சொல்ல வந்த கருத்து எனக்குப் புரிகிறது. ஆனால் அவைகளை ஏற்க இயலாது. வேதத்தில் மொழிபெயர்ப்புகள் உண்டு; ஆனால், வேதத்தை யாரும் மாற்றவில்லை. உலகமொழிகளுக்கேற்ப அனைத்து மக்களும் வேதத்தை அறிந்துகொள்ள வேதத்தை மொழிபெயர்த்துள்ளார்களே தவிர வேதத்தை யாரும் மாற்றவில்லை. எனவே, அதன் புனிதத் தன்மையும் மாறவில்லை

அடுத்தது, கலிலேயாவிற்கும் கத்தோலிக்கர்களுக்கும் நடந்த பிரச்சினை வேறு. வேதம் ஆதியில் இருந்தே பூமி உருண்டை என்றுதான் சொல்கிறதேயொழிய, பாதியில் வந்த கலிலேயா சொன்ன கருத்தை வைத்து வேதம் எழுதப்படவுமில்லை, திருத்தப்படவுமில்லை. அடுத்து, குரானில் உள்ள ஈஸா வேறு; பைபிளில் உள்ள இயேசு வேறு என்பதை நீங்கள் அறியாததினால்தான் உங்களுக்கு குழப்பம் வருகிறது. நாங்கள் தெளிவாகத்தான் இருக்கிறோம்

ஈஸாவை அறிய குரானில்தான் தேட வேண்டும். ஏனென்றால், ஈஸா ஒன்றும் இயேசு அல்ல. ஆனால், இயேசுகிறிஸ்துவை அறிய நாங்கள் ஏன் குரானில் தேட வேண்டும்? அவரைப்பற்றித்தான் ஆதியில் இருந்தே பைபிளில் உலகத்தோற்றமுதலே தெளிவாக பற்பல தீர்க்கதரிசிகளைக் கொண்டு சொல்லியிருக்கிறதே

நாங்கள் தொழுதுகொள்ளும் இயேசு முழுஉலகத்தின் பாவத்தை சுமந்து தீர்த்து, மரணத்தை ருசி பார்த்து, கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து முழு உலகிற்கும் இரட்சிப்பை தந்துள்ள தேவனை

குரானில் உள்ள ஈஸா வேண்டுமானால் உங்கள் கூற்றுப்படி இருக்கலாம். ஆனால், அவர் நாங்கள் விசுவாசிக்கிற, தொழுதுகொள்கிற இயேசு இல்லையே

ஈஸா என்பவர் முகமது நபியால் உங்களுக்கு சொல்லப்பட்டவர். அதனால் அவர் சொன்ன கதைப்படி இருக்கலாம். ஆனால், நாங்கள் ஒருபோதும் ஈஸாவை கடவுளாகவோ, தூதுவனாகவோ ஏற்க இயலாது. குரானில் உள்ள ஈஸா வேண்டுமானால் தன்னை தூதுவனாக முன்னிருத்தியிருக்கலாம். அதனால், கிறிஸ்தவர்களாகிய எங்களுக்கு என்ன வந்தது

குரான் சொல்லும் ஈஸாவை நீங்கள் நம்புங்கள். அது உங்கள் நம்பிக்கை. அதைக்குறித்து எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. முகமதுநபி சொல்லும் ஈஸா நபி மரிக்காமல் பிள்ளை குட்டிகளோடு காஷ்மீர் பக்கமோ, குஜராத் பக்கமோ குடியிருந்திருக்கலாம். அது முகமது நபிக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் ஒருவேளை தெரிந்திருக்கலாம். அதைப்பற்றி எங்களுக்கு என்ன வந்தது? அது உங்கள் நம்பிக்கை

ஆனால், நாங்கள் விசுவாசிக்கும் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவோ மரணத்தை வென்றவர்; முழுமனுக்குலத்திற்கும் இரட்சிப்பைத் தந்தவர்; மீண்டும் வரப்போகிறவர்

இயேசு தான் கடவுள் என்பதை எப்படி சொன்னார்? எப்போது சொன்னார்? எதன் அடிப்படையில் சொன்னார்? என்பதை அடுத்த கமெண்ட் பாக்சில் இடுகிறேன். இடப் பற்றாக்குறையின் காரணமாக
  · 

Charles MC
Charles MC யோவான் 13:14 - “ஆண்டவரும் போதகருமாகிய நானே

1. யாருடைய பெயரில் மக்கள் அனைவரும்...See More
  · 

Charles MC
Charles MC 11. கடைசி நாளில் யார் மனிதர்களை உயிரோடு
எழுப்புவார்கள்? ... இயேசு...See More
  · 
3

Charles MC
Charles MC 21. பாவங்களை மன்னிக்க யாருக்கு அதிகாரம் உண்டு? ... இயேசுவிற்கு

இயேசு கூறினார்: பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை...See More
  · 
2

Charles MC
Charles MC 31. யார் மக்களின் உள்ளங்களையும் நினைவுகளையும் அறிந்துள்ளவர்? ... இயேசு

இயேசு கூறினார்: …. நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று...See More
  · 
2

Deva Kumar
Deva Kumar (அல்ஃ 1:1) அல்லா என்பவர் அகிலத்தாரின் இறைவன் யோவான் 17,16 இயேசு அகிலத்தார் அல்ல அவரை பின்பற்றுகிறவர்களும் அகிலத்தார் அல்ல யார் அகிலத்தார்?பாவத்திலே இருக்கும் ஜனங்களே அகிலத்தார் அல்லாஹ் அவர்களுக்கே இறைவன் பாவத்தில் இருப்பவர்களை மட்டுமே அவரால் ஆளுகை செய்ய முடியுமா? (ஆதியாகமம் 1,1) வேதத்தில் இருக்கும் கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தவர். ஆதியாகமம் 17,1 நான் சர்வவல்லமையுள்ள தேவன் என்று சொல்கிறார் இரண்டு வேதத்திலும் முதல் வசனத்திலே கடவுளின் தன்மையை விளக்குகிறது என் சகோதரர்கள் அதை ஆராய வேண்டும்
  · 
1
 · 23 hrs · Edited

Deva Kumar
Deva Kumar அல்பகரா 2,106 குர் ஆனில் ஏதாவது வசனத்தை மாற்றினால் அல்லது அதை நாம் மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததை,அது போன்றதை அல்லாஹ் கொண்டுவருவார் குர்ஆன் மாற்றி எழுதப்படலாம் என்று குர்ஆனே சாட்சி /மத்தேயு 5,18 வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் வேதத்தில் சிறு எழுத்தும்,எழுத்தின் உறுப்பும் ஒழிந்து போகாது என்று வேதம் சொல்கிறது அப்படியென்றால் எது இறை வேதம்?
  · 23 hrs

Charles MC
Charles MC நல்ல ஒப்பீடு; சிந்தித்து ஆய்வு செய்து ஏற்றுக் கொள்ள வேண்டிய கருத்து. அன்புச்சகோதரர்கள் இனிய இஸ்லாமியர் இதைச. செய்ய முன் வந்தால் சந்தோஷம்.
  · 
1

நசீர் அஞ்சன்
நசீர் அஞ்சன் Deva Kumar நீங்க குறிப்பிட்ட அந்த அல் பகரா 2. 106 வசனமே சாட்சி இந்த புனித குர்ஆன் மாற்றப்படவில்லை அதற்கு முன் வந்த இன்சில் (பைபில்) என்பது மாற்றப்பட்டு இடைச்செருகள் செய்யப்பட்டதால் தான் அதை விட சிறந்த குர்ஆன் உலக மக்களக்கிற்கு வழங்கப்பட்டது சிந்தித்து பாருங்கள் புரியும்..
  · 20 hrs

நசீர் அஞ்சன்
நசீர் அஞ்சன் Charles MC உங்களது கருத்தில் இருந்தே தெரிகிறது நீங்கள் எந்தளவிற்கு அடுத்தவர்களின் கருத்தை புறம்தள்ளுபவர் என்று... ஈஸா (அலை) அவர்களை யார் உங்களிடம் குஜராத்தில் புள்ளை, குட்டியுடன் வாழ்ந்தார் என்று கூறினர் ஏன் உங்கள் கற்பனையை இங்கு பேசுகிறீர்கள்...
  · 20 hrs

Deva Kumar
Deva Kumar சகோதரர் நசீர் அஞ்சன் இது எனன கத்தரிக்காய் வியாபாரமா ஒன்று கெட்டு போனால் இன்னொன்று என்பதற்கு
  18 hrs

Deva Kumar
Deva Kumar அதுபோகட்டும் குர்ஆனில் ஒருமனிதன் நல்வழிபட ஒரு வசனம் மட்டும் உங்களால் காண்பிக்க முடியுமா
  · 18 hrs

Arueseswaran Eswaranec
Arueseswaran Eswaranec பாலஸ்தீனம் அழிந்தால் நன்று
  · 15 hrs

Charles MC
Charles MC நசீர் அஞ்சன்அவர்களே - மதிய வந்தனம். உங்களைப்போல் இஸ்லாமிய நண்பர்கள் பலர் எனக்கு உண்டு. அவர்கள்தான் அடிக்கடி இப்படி சொல்வர். அதனால் அதை அப்படியே நகைச்சுவையாக இருக்கட்டுமே என எழுதினேன். மற்றபடி வேறொன்றுமில்லை. உண்மையில்லாதவைகளை மற்றும் அறியாமையிலிருந்து வரும் தவறான புரிதலை, தவறான ஒப்பீடுகளை, சற்றும் பொருத்தமில்லாத கற்பனைகளை, வேதத்திற்கும் அதற்கு சம்பந்தமற்றவைகளை அபவாதங்களை அங்கீகரிக்க இயாலாது. மற்றபடி யார் எதைச் சொன்னாலும் கருத்தை வரவேற்கலாம். ஆனால், ஏற்க இயலாது. உண்மையே இல்லாததை ஏற்பது எவ்வாறு? உண்மையில்லாததை பொருந்தாததை புறம் தள்ளுவதைத் தவிர வேற என்ன செய்ய இயலும் என எனக்கு புரியவில்லை சகோதரரே.
  · 14 hrs

நசீர் அஞ்சன்
நசீர் அஞ்சன் Deva Kumar என்ன கத்திரிக்காய் வியாபாரமோ, புடலங்காய் வியாபரா மோ கெட்டு போனால் வேறு வாங்குவதுதான் இயல்பு. அப்ப ஈஸா (அலை) அவர்களுக்கு முன் வந்த யாருக்கும் வேதம் அருள்படவில்லை என்பீர்களா ?

குர்ஆனில் மனிதன் எப்படி நல்லோழுக்கத்துடன் வாழ வேண்டும் என்று குர்...See More
  · 12 hrs · Edited

நசீர் அஞ்சன்
நசீர் அஞ்சன் Arueseswaran Eswaranec பாலஸ்தீன மக்களுக்கு நடக்கும் அநீதியைக் கண்டும் அவர்கள் வீடுகளை விட்டு அவர்கள் வெளியெற்றப்பட்டு, அவர்கள் குழந்தைகளை சல்லடையாக கொன்று குவிக்கும் இஸ்ரேலுக்கு சப்போர்ட் செய்யும் நீ நிச்சயமாக நல்ல சாவு சாவ மாட்ட.. உனக்கும் குழந்தைகள் இருக்கு மனசாட்சியுடன் பேசு.
  · 13 hrs

நசீர் அஞ்சன்
நசீர் அஞ்சன் Charles MC நீங்க உண்மையென்று சொல்வது எது சைத்தானை கர்த்தரின் பெயரில் விரட்டுகின்றோம் என்று சாகசம் செய்கிறார்களே அவர்கள் செய்வதா ?
  · 12 hrs

Xenophile Didace
Xenophile Didace Nazeer. Bible yengay ulagam thattaiyaga ullathaga kuripittu ullathu vasanathai kattavum
  · 12 hrs

Charles MC
Charles MC நசீர் அஞ்சன் - #இன்னுமா புரியவில்லை நசீர்?! விளக்கமாகவே கூறுகிறேன்.
முதலில், பரிசுத்த வேதமாகிய பைபிளை குரானோடு ஒப்பிடுவதே தவறு. ஏனென்றால், ஆதியிலே இருந்தே பரிசுத்த வேதாகமம் இருக்கிறது. ஆனால், குரானோகிறிஸ்து பிறந்த பின் கி.பி.6 ஆம் நூற்றாண்டில் முகமது நபியால் எழுதப்பட்டது குரான். ஆதியில் இருந்தே இருக்கிற வேதமாகிய பைபிள் முந்தையதா? பல நூற்றாண்டுகள் கழித்து, கிறிஸ்துவுக்குப் பின் வந்த குரான் முந்தையதா? எது முந்தினது

பைபிளில் இரண்டு பகுதிகள் உண்டு. 1. பழைய ஏற்பாடுஇது எபிரேய மொழியில் எழுதப்பட்டது. யூதர்களுக்கானது. 2. புதிய ஏற்பாடுகிரேக்க மொழியில் எழுதப்பட்டது. கிறிஸ்தவர்களுக்கானது. ஏன் இரண்டும் ஒரே வேதமாக கொடுக்கப்பட்டது? யூதர்களுக்கு கொடுக்கப்பட்ட பழைய ஏற்பாட்டில் கிறிஸ்து வாக்களிக்கப்பட்டிருந்தார். அதன் நிறைவேறுதலாக இயேசு வந்தார்.

இயேசுவைக்குறித்த தீர்க்கதரிசனங்கள், அவரது பிறப்பு மற்றும் மரணம், உயிர்த்தெழுதல் போன்ற அனைத்தையும் பற்றிய முன்னறிவிப்புகள் பழைய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்டிருந்தது. யூதர்களுக்கு மீட்பும், முழுஉலகிற்கு இரட்சிப்பும் விடுதலையும் ஆண்டவர் இயேசு மூலமாய் வந்தது

புறஜாதிகளுக்கு இரட்சிப்பு யூதர்கள் வழியாகவே இவ்வுலகிற்கு வந்தது. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மேசியாவாகிய இயேசுவை புறம்தள்ளி, அவர்கள் சிலுவையில் அறைந்து கொன்று கல்லறையில் அடக்கம் பண்ணினார்கள். வேதம் சொல்லுகிறது: யோவான்: 1:11 – “அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.” 

எனவே, யோவான்: 1:12 – “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.” 

அது முதற்கொண்டு முழுஉலகிற்கும் இரட்சிப்பு கொடுக்கவும், அவரை விசுவாசிக்கிறர்களை தேவனுடைய பிள்ளைகளாகும்படியான அதிகாரத்தையும் வழங்கினார். இயேசுவைக்குறித்து தெளிவாக அறிந்து கொள்ள முழுவேதாகமத்தையும் வாசித்தால்தான் விளங்கிக்கொள்ள முடியும். ஆகவே, இவ்விரண்டு ஏற்பாடுகளும் ஒரே வேதமாக தேவன் நம் கைகளில் கொடுத்துள்ளார்.

அப்படியிருக்க… 

கி.பி.6 ஆம் நூற்றாண்டில் பிறந்து வந்த முகமது நபிக்கு, யூதர்களோடோ அல்லது இயேசுவோடோ அல்லது அவருடைய சீடர்களோடோ அல்லது பரிசுத்த வேதமாகிய பைபிளோடோ (அல்லது முகமது நபி தனது பிறப்பில்கூட) எவ்வித சம்பந்தமும் இல்லாதபோது, பைபிள் தவறு; இயேசு கடவுளல்ல என்பது போன்ற கருத்துக்களை கூறுவது அபவாதம் இல்லையா நசீர் அவர்களே!?

முதலில் கொடுத்த பைபிள் தவறு; அதைத்திருத்தவே முகமது நபி வந்தார் என சொல்வது அதைவிட அபத்தமில்லையா

பைபிளை திருத்த எவருக்கும் அதிகாரம் இருக்கிறது? கடவுளுடைய வார்த்தையை யாரால் மாற்ற இயலும்? அந்தளவிற்கு அதிகாரம் படைத்தவரா உங்கள் முகமது நபி

யூதர்களுடைய பழைய ஏற்பாட்டையும், கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட புதிய ஏற்பாட்டையும் திருத்தி எழுதி குரானை கொடுத்தார் என்று சொல்லுகிற நீங்களும் சரிமுகமது நபியும்சரிகடவுளின் பெயரை எதற்கு மாற்றி அல்லா என்ற புதிய பெயரை உங்களுக்கு முகமது நபி ஏன் கொடுக்க வேண்டும்? இதிலிருந்தே இஸ்லாமியர்களாகிய உங்களுக்குத் தெரியவில்லையாமுகமது நபி எவ்வளவு தவறாக உங்களை வழிநடத்தியிருக்கிறாரென்று?
  · 4 mins

Charles MC
Charles MC திருத்தி தந்தார்திருத்தி தந்தார்என்று கூறும் உங்களைப் பார்த்துக் கேட்கிறேன். ஏதோ ஒரு எழுத்து அல்லது ஒரு பெயர் திருத்தம்என்றால் சரி
மொத்த சம்பவங்களை திரித்து கூறுவதும், அனைத்து பெயர்களும் மாறியிருப்பதும், ஏன் பைபிளில் இருக்கும் கடவுள்கர்த்தர்என்றும், “யெகோவாஎன்றும் புதிய ஏற்பாட்டில்இயேசுஎன்றும் உள்ளதைக்கூடவா திரித்து கூறுவது

இதிலிருந்தே குரான் எப்படி பொய்யாக முகமது நபியால் மாற்றி எழுதி உங்களுக்கு தரப்பட்டது என்று விளங்கிக் கொள்ள உங்களால் முடியவில்லை. முரண்பாட்டின் மொத்த உருவம் முகமதுநபி. முரண்பாட்டின் மொத்த புத்தகம் குரான் என்பதை தாங்கள் தங்களைச் சார்ந்தவர்கள் அறிந்திடுக.

இப்படி தப்பும் தவறுமாக பைபிள் சொல்லும் கடவுளையும் மறுதலித்து, அதன் உண்மைத் தன்மைகளையும் மாற்றி எழுதும்படிஓதுகஎன்று முகமது நபியின் செவியில் சொன்ன அந்த ஜிப்ராயில் தூதன் உண்மையாகவே யாராய் இருப்பான்? என்பதை உங்கள் முடிவிற்கே விட்டு விடுகிறேன்.

இப்படி எவ்விதத்திலும் பொருத்தமில்லாத குரானை, யாரோ ஒரு தூதன் கடவுளுடைய வரலாற்றை, உலக சம்பவங்களை தப்பும் தவறுமாக பொருத்தமில்லாமல் சொன்னதை முகமது என்கிற மனிதன் எழுதிய ஒரு புத்தகத்தை கொண்டுபோய், பரிசுத்த வேதாகமத்தோடு ஒப்பிடுவது சரியல்ல. அது அபவாதம்.

ஆகவே, முந்தி வந்த பரிசுத்த வேதமாகிய பைபிள் உண்மை. அதுகூறும் அனைத்தும் உண்மை. இதுவே உங்களுக்கு நான் சொல்லும் உண்மை.

கடைசியாக… 

மாற்கு: 16:17 – “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்.” என்கிற வசனத்தின்படி அவர்கள் செய்கிறார்கள். அநேகர் விடுதலையும் பெறுகிறார்கள். அது உங்களுக்கு சாகசமாக தெரிந்தால்உங்களுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். நன்றி.

இவ்வாறாக கருத்துப்பரிமாற்றம் நடந்தது.

இருளிலிருப்போர் இருளுக்குள் அழைக்க உபயோகப்படுத்தும் உபகரணங்கள் மற்றும் இயேசு, "தான் கடவுள்" தான் என நிரூபிக்கக்கூடிய வேத விளக்கங்களை இரண்டாம் பகுதியில் விரிவாக காண்போம்.


தொடரும்….