டிசம்பர் 15, 2017

இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி … பகுதி – 3

 Image result for Bible in the light

இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி … பகுதி – 3

ஏசாயா: 9:2 – “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது”.

இருளில் வாழும் கூட்டத்தில் இருவகை உண்டு. 1. அறியாமலே இருளில் இருப்போர் 2. அறிந்தும் இருளில் இருப்போர்

1.   அறியாமலே இருளில் இருப்போர்:

1.   இந்துக்கள் 2. முஸ்லீம்கள் 3. நாஸ்திகர்கள் 4. புத்த மத மற்றும் ஜைன மதத்தினர் 5. சீக்கியர் 6. பார்சி இனத்தவர்

2.   அறிந்தும் இருளில் இருப்போர்:

1.   கத்தோலிக்கர்கள் 2.யெகோவா விட்னஸ் 3. துர் உபதேசிகள் 4. கள்ளத்தீர்க்கதரிசிகள் 5. பின்மாற்றக்காரர் 6. யூதர்கள்

இருளில் நடக்கிற ஜனங்கள் என்றும், மரண இருளில் குடியிருக்கிறவர்கள் என்றும் வேதம் இவ்விரு கூட்டத்தைக் குறித்து கூறுகிறது. ஆனால், ஒரு நல்ல செய்தி என்னவென்றால் … இவ்விரு கூட்டத்திற்கும் தேவன் வெளிச்சத்தை பிரகாசிக்கப் பண்ணுகிறார். எப்படியாகிலும் இவர்கள் மீட்கப்பட வேண்டும் என்பதற்காக இவர்கள்மேல் வெளிச்சத்தை பிரகாசிக்கப் பண்ணுகிறார். அவர்கள் அந்த வெளிச்சத்தை விசுவாசித்துப் பின்பற்றி வருவார்களானால் … மெய்யாகவே இரட்சிப்பையும் மீட்பையும் பெறுவார்கள்.

அதற்கு அவர்களுக்கு வெளிச்சத்தைக் காண்பிக்கக்கூடிய மனிதர்கள் தேவனுக்குத் தேவை. சத்தியத்தை அறிந்த தேவனுடைய பிள்ளைகள் சுவிசேஷத்தின் ஒளியை அவ்விருகூட்டத்திற்கும் கொண்டு செல்ல முன்வர வேண்டும். அதற்கு முதலில் நாம் சத்தியத்தை நன்கு அறிந்திருக்க வேண்டும். அதோடுகூட, அவ்விரு கூட்டத்தின் நம்பிக்கைகளையும், அதன் அடிப்படைக் கொள்கைகளையும் நன்கு அறிந்திருத்தல் அவசியம்.

 அதனோடு நமது பரிசுத்த வேதத்திலிருந்து எவ்வளவு தூரமாயிருக்கிறது? எவ்வளவு வித்தியாசப்படுகிறது? எவ்வளவு உண்மைக்கு தூரமாக விலகியிருக்கிறது? மெய் தெய்வத்தையும், பரலோக பாக்கியத்தையும், பரிசுத்த வாழ்வையும் விட்டு விலகியிருக்கும் வித்தியாசத்தையும், அதனால் ஏற்படும் விளைகளையும் நாம் முதலில் நன்கு அறிந்திருக்க வேண்டும். இவைகளில் பரிசுத்த வேதாகமம் எவ்வளவு மேன்மையானது, உயர்ந்தது, விலையேறப்பெற்றது என்பதை நாம் முதலில் ருசித்திருக்க வேண்டும்.

மாற்றுக் கருத்துடையோருக்கு விளக்கமளிப்பதற்கு முன்பு, நாம் நமது சத்திய வேதத்தின் மகத்துவங்களையும், அதன் உண்மைத்தன்மையையும், சத்தியத்தின் ஆழங்களையும், அடிப்படை அஸ்திபார உபதேசத்தில் ஸ்திரத்தன்மையோடும், மூலஉபதேசங்களையும் இடறலின்றி கற்றறிந்திருக்க வேண்டும். அனுதின வேதவாசிப்பும், ஜெபவாழ்வும், விசுவாச வாழ்வும், பக்தி வைராக்கியமும், பரிசுத்தமும், சாட்சி நிறைந்த வாழ்வும் நம்மில் காக்கப்பட்டிருக்க வேண்டும்.

மேலும், சபை சரித்திரமும், வேதாகம சரித்திரமும், வேதாகம பின்னணியும், ஓரளவுக்கு தெரிந்தவர்களாக தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான ஆவிக்குரிய நூல்கள், சரித்திர புத்தகங்கள் சேகரிக்கப்படவும், அதை வாசித்து தக்க சமயத்தில் எடுத்துரைக்கவும் ஆயத்தமாயிருக்க வேண்டும்.

தீத்து: 1:9 – “ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்பேசுகிறவர்களைக் கண்டனம் பண்ணவும் வல்லவனுமாயிருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக் கொள்ளுகிறவனுமாயிருக்கவேண்டும்”

2தீமோத்தேயு: 4:2 – “சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு”

இருளிலிருப்போர் பரிசுத்த வேதாகமத்தில் உள்ள வசனங்களை தவறாக ஒப்பிட்டு இடறலை விசுவாசிகள் முன்பாக வைப்பார்கள். அதற்குரிய பதிலும் சத்தியத்தையும் நாமும் நமது விசுவாசிகளும் அறிந்திராவிட்டால் நாமும் இடறிப் போக நேரிடும்.

இருளில் இருப்போர் நமக்கு முன் வைக்கும் இடறல்களில் ஒன்று:

உபாகமம்: 18:15 – “உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.” 

- என்கிற வசனத்திலிருந்து சொல்லப்பட்ட அந்த தீர்க்கதரிசி முகமதுநபி தான் என்றும் வலியுறுத்துவார்கள்.

இந்த உபாகமம்: 18:15 ஆம் வசனம் யாருக்கு யாரால் கொடுக்கப்பட்டது? அல்லது சொல்லப்பட்டது? உரைக்கப்பட்டது? என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

இஸ்ரவேல் ஜனங்களுக்கு தேவனாகிய கர்த்தரால், மோசேயின் மூலமாக கொடுக்கப்பட்ட தேவனுடைய வார்த்தை.  

இஸ்ரவேல் ஜனம் என்று சொல்லும்போது யாக்கோபின் பிள்ளைகளான 12 பேரைக் குறிக்கும். 12 பேரும் கோத்திரப் பிதாக்கள் என அழைக்கப்பட்டனர். இவர்களின் சந்ததியைத்தான் “இஸ்ரவேல்” என்றும், “இஸ்ரவேல் ஜனம்” என்றும் வேதம் குறிப்பிடுகிறது.

12 கோத்திரங்கள்: 

1.   ரூபன் 2. சிமியோன் 3. யூதா 4. செபுலோன் 5. இசக்கார் 6. தாண் 7. காத் 8. ஆசேர் 9. நப்தலி 10. எப்பிராயீம் 11. மனாசே 12. பென்யமீன்

இப்படியிருக்க …

மோசே சொன்ன வார்த்தையின்படி பார்ப்போமானால் … “என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார்;” – என்று சொல்வதை கவனியுங்கள். இதன் பொருள் என்ன?

12 கோத்திரத்தாரைத்தான் யூதர்கள் என்கிறோம். மோசே ஒரு லேவிக் கோத்திரத்தைச் சேர்ந்தவன். ஒரு யூதன். (யாத்திராகமம்: 2:1). எனவே, அவனைப்போல மோசேயைப் போல ஒரு தீர்க்கத்தரிசியை எழும்பப் பண்ணுவார். யாருக்காக? “உனக்காக”. அதாவது, இஸ்ரவேல் ஜனத்திற்காக. வேறு எந்த இன மக்களுக்காகவும் அல்ல. யார் நடுவே எழும்பப் பண்ணுவார்? “உன் சகோதரரிலிருந்து”. அதாவது, இஸ்ரவேலின் சகோதரர்கள் யார்? 12 கோத்திரர்களே. அப்படியானால், அந்த 12 கோத்திரங்களின் சந்ததியிலிருந்து, “என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார்;” என்பதுதான் இதன் பொருள்.

உலகில் உள்ள வேறு ஜனத்திலிருந்தோ, இனத்திலிருந்தோ, வேறு மார்க்கத்திலிருந்தோ அல்ல. யூதர்கள் தங்கள் சகோதரர்கள் எனக் குறிப்பிடுவதும் ஏற்றுக் கொள்வதும் தங்கள் 12 கோத்திரங்களைச் சார்ந்தவர்களைத்தான். வேறு யாரையும் அவர்கள் ஏற்பதில்லை.
காரியம் இப்படியாயிருக்க …

இருளில் இருக்கும் இஸ்லாமியர், சத்தியமறியாத அப்பாவி விசுவாசிகளையும், வேதமறியாத விளையாட்டுப்பிள்ளைகளான வாலிபர்களையும், வாலிபப்பிள்ளைகளையும் வஞ்சிக்கும்படியான இடறல்களை இவ்விதமாக கூறி வஞ்சிப்பதை நாம் கேள்விப்படுகிறோம். அதற்காக ஜெபித்தால் மட்டும் போதாது. போதிக்கப்படவும் கற்பிக்கவும் வேண்டும்.

இந்த முகமதுநபி யார்? ஒரு யூதனா? இல்லை இஸ்ரவேலனா? அல்லது 12 கோத்திரங்களில் ஒருவனா? கானான் நாட்டைச் சார்ந்தவரா? இதில் எதுவும் இல்லை. அரபு தேசத்தில் கி.பி. 620 ல் பிறந்த ஒரு அரேபியன். புறஜாதியான். அவரது கடவுள் எது? அல்லா என்கிறார். அப்படியிருக்க, கர்த்தர் யூதனாகிய மோசே மூலம் பன்னிரு கோத்திரங்களுக்கும் சொன்ன ஒரு வார்த்தையை, தனக்குரியதாக்கிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் என்ன?

பிறப்பிலும், இனத்திலும், மார்க்கத்திலும் எவ்வித சம்பந்தமும் இல்லாத முகமது நபி எப்படி இந்த வசனத்தை தனக்குரியதாக்கி பேசுகிறார்? இதிலிருந்தே நாம் அறிந்து கொள்ளலாம் - இவன் ஒரு மோசடிக்காரன் என்று. தனக்குரிமையில்லாததை தனக்குரியது என்று சொல்கிறவன் வேறு யாராக இருக்க முடியும்?!

 பைபிளை மாற்றி திருத்தி எழுதிக் கொடுத்தவன் அல்லா எனக்கூறும் முகமது நபி … அல்லா எழுதாத பைபிள் வாசகத்தில் உள்ள வசனத்தில் உள்ள தீர்க்கதரிசி தான்தான் என சொல்லி திரிவதின் இரகசியம் என்ன? எதன் அடிப்படையில் இதைக் கூறுகிறார்? இதற்கு ஆதாரம் என்ன?

பைபிள் தவறு என்று சொல்லுகிற முகமது, இந்த வசனம் சரி என ஒத்துக் கொள்கிறாரா? இந்த வசனம் சரி என்று ஒத்துக்கொண்டால் … வசனத்தின்படி “கர்த்தர்” தான் தெய்வம். அல்லா தெய்வம் இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறாரா? தான் ஒரு யூதன் இல்லையென்றும், தன்னைக் குறித்து இந்த வசனம் சொல்லப்படவில்லையென்றும் முகமது நபியும், அவரது கொள்கையாளர்களும் ஒத்துக் கொள்கின்றனரா?

இந்த வசனம் சரி என்றால், இதற்கான விளக்கமும் சரி என்றால் தான் ஒரு மோசடிக்காரன் என்பதை ஒப்புக் கொள்கிறாரா? கேள்விகள் நிறைய உண்டு. பதில்தான் அவர்களிடத்தில் இல்லை.

இதைவிடக் கொடுமை இன்னொன்று இருக்கிறது. அது என்னவென்றால் …

இருளில் இருப்போர் நமக்கு முன் வைக்கும் இடறல்களில் இரண்டாவது:

முகமது நபியை இருளில் இருக்கும் இன்றைய இஸ்லாமியர்கள், பரிசுத்தாவிக்கு இணையாக ஒப்பிடுவது கொடுமையிலும் கொடுமை. அபத்தத்திலும் அபத்தம். அவர்கள் பரிசுத்த தெய்வத்தையும் அறியவில்லை. பரிசுத்த ஆவியையும் அறியவில்லை என்பதற்கு இதைவிடச் சான்று வேறில்லை.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் …

வேதாகமத்தை இழிவுபடுத்த வேண்டுமென்று முடிவெடுத்த பின்னர் எந்த வசனத்தை எந்த அசுத்தமானதோடு ஒப்பிட்டால் என்ன?! என்ற முடிவிற்கு வந்த விட்டதால்தான். பரிசுத்த வேதாகமத்தை பொய்யானதாகவும், மாற்றப்பட்டதாகவும் கூறினால்தான் குரானை அவர்களால் வளர்க்க முடியும் என்கிற நிலைப்பாடு அவர்களுடையது. அவர்களுக்கு வேறு வழியில்லை. நமக்கு அப்படியில்லை.

திருத்தப்பட்டது … திருத்தப்பட்டது என்று திரும்ப திரும்ப சொல்கிற இவர்கள் கூற்றை நன்கு கவனியுங்கள். பைபிளிலிருந்து திருத்தி எழுதப்பட்டது குரானா? குரானிலிருந்து திருத்தி எழுதப்பட்டது பைபிளா? என்று அவர்கள் சொல்வதை கவனியுங்கள். 

அவர்கள் சொல்வது இதுதான்: “பைபிளிலிருந்து திருத்தி முகமதுவால் எழுதப்பட்டது குரான்தான்” என்பார்கள். அப்படியிருக்க, பைபிள் எப்போது? எங்கே? திருத்தி எழுதப்பட்டது? அவர்கள் வாயே அவர்களை காட்டிக் கொடுப்பதை கவனியுங்கள். இதைக் குறித்து விளக்கமாக “இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி … பகுதி – 1” ல் விளக்கமாக எழுதியுள்ளேன். வாசித்தறியுங்கள். ( Link: https://nesarin.blogspot.in/2017/12/blog-post.html )

இருளில் இருப்போர் நமக்கு முன் வைக்கும் இடறல்களில் மூன்றாவது:

உன்னதப்பாட்டு புஸ்தகத்தை மாம்சீகக் கண்ணோட்டத்தில் விமர்சிப்பது. நாம் ஆவிக்குரியவர்கள்.

1கொரிந்தியர்: 2:6-15 – “தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை; நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார். மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம். அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக்காண்பிக்கிறோம். ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான். ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்…” என்று வேதம் கூறுகிறது.

ஆகவே, நாம் ஆவிக்குரியவர்கள். ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான். உன்னதப்பாட்டு புத்தகம் நமக்கு கூறுவது என்ன? அது மணவாளனுக்கும் மணவாட்டிக்கும் உள்ள உறவை சித்தரிக்கிறது. மணவாளன் இயேசுவுக்கும் மணவாட்டி திருச்சபைக்கும் ஒப்பாக ஒப்பிடப்படுகிறது என்பதை ஆவிக்குரியவர்களான நாம் அதை அறிவோம். முழுவதும் மாம்சீக கண்ணோட்டத்தில் காணும் எவருக்கும் இது தவறானதாகவே காணப்படும்.

இருளில் இருப்போர்களின் சந்தேகக் கணைகளுக்கும், கேள்விகளுக்கும் அளவே இருக்காது. அவை ஒவ்வொன்றிற்கும் விளக்கம் தரவேண்டிய அவசியமும் நமக்கு இல்லை. இம்மூன்று பகுதி கட்டுரைகளும் நமக்கு வலியுறுத்தப்படும் செய்தியின் சாராம்சத்தை அறிந்து, உணர்ந்து, அதை அறியாத விசுவாசிகளுக்கும், புரியாத பிள்ளைகளுக்கும் எடுத்துச் சொல்லி அவர்களது விசுவாச பலவீனத்தை சரிப்படுத்தி, சத்தியத்தின்மேல் ஊன்றக்கட்டப்பட வேண்டியது அவசியமாகும்.

ஏனென்றால், நம்முடைய குழந்தைகள் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயின்று வருகிறார்கள். அவர்களின் அறியாமையை இவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, பரிசுத்த வேதாகமத்தை அவமாக்கி, பொய்யானதென்று தவறான தகவல்களை கூறி, கடவுளைப்பற்றி சந்தேகத்தை கிளப்பி விட்டு, பின்மாற்றமடையச் செய்கிறார்கள். இந்த ஆபத்திலிருந்து கிறிஸ்தவ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் காத்துக் கொள்ள வேண்டும். தவறினால், நம் பிள்ளைகள் கண்களிருந்தும் குருடர்களாக, ஆக்கினைக்கேதுவாக, போகக்கூடிய சூழல் ஏற்படும். எச்சரிக்கையாயிருங்கள். அநேக பள்ளி கல்லூரிகளில் கிறிஸ்தவ பிள்ளைகளுக்கு எதிராக “லவ் ஜிகாத்” என்கிற பெயரில்  வஞ்சிக்கப்படுகிறார்கள். கவனமாயிருங்கள். காத்துக் கொள்ளுங்கள்.

அன்பான தேவஜனமே!  ஆவிக்குரிய பெற்றோர்களே!

வாராம் தவறாமல் ஒழுங்கும் கிரமுமாக சபை ஆராதனைக்குச் செல்லுங்கள். ஆவிக்குரிய காரியங்களில் மற்றும் சபைக் காரியங்களில் ஆர்வமாக பங்குபெறுங்கள். அதைப் பார்க்கின்ற நம்பிள்ளைகளும் அதில் அதிக கவனம் செலுத்தி தேவனுக்குப் பிரியமாக நடந்து கொள்வார்கள். ஆவிக்குரிய ஐக்கியத்தை வாஞ்சியுங்கள். ஐக்கியத்தில் பங்குகொள்ள ஊக்கமளியுங்கள். வீடுகளில் விடுமுறைநாட்களில் பிள்ளைகளுக்கு, அவர்களுக்கு பிடிக்கும் வகையில் தனித்தோ அல்லது குடும்ப ஜெபநேரங்களிலோ தேவ ஆலோசனை கொடுங்கள்.

வாரம் தவறாமல் சபையில் நடக்கும் வேதபாட வகுப்புகளில் நீங்களும் கலந்து கொண்டு பிள்ளைகளையும் பங்குபெறச் செய்யுங்கள். அது அவர்களை சத்தியத்தில் ஊன்றக் கட்ட உதவி செய்யும். வேதபாட வகுப்புகளில் குறிப்பேடு வைத்து முழுவதையும் எழுதி குறிப்பெடுக்கச் சொல்லுங்கள். சந்தேகம் ஏற்படின் உடனே பிள்ளைகளுக்கு விளக்கமாக பொறுமையோடு சொல்லி தாருங்கள். உங்களுக்கே ஒருவேளை தெரியாதிருந்தால் … தயக்கமின்றி, தாமதமின்றி போதகரோடு தொடர்பு கொண்டு சந்தேகத்திற்கான தீர்வை உடனடியாக தெரிந் கொண்டு, பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள்.

வேதத்தை வாசிக்க ஊக்கப்படுத்துங்கள். வேதத்தை தியானிக்க கற்றுக் கொடுங்கள். விடுமுறை நாட்களில் இவ்வளவு அதிகாரங்கள் வாசித்தால் இந்த பரிசு உனக்குத் தருவேன் என கூறி, சிறுசிறு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்துங்கள். அன்புடன் கண்டிப்பும் செலுத்துங்கள். 

கவனமாயிருங்கள். பிள்ளைகளை ஜெபத்திலே கர்த்தரிடத்தில் ஒப்புக் கொடுங்கள்.

பிள்ளைகளின் தாலந்துகளை கண்டறிந்து, அவர்கள் தங்கள் தாலந்துகளை சபையில் பயன்படுத்த போதகரிடம் அனுமதி கேட்டு செயல்பட செய்ய வாய்ப்பு ஏற்படுத்துங்கள். ஜெபத்தில் உருவாக்குங்கள்.

மாற்று மார்க்கத்தாரோடு பள்ளி கல்லூரிகளில் பழகும்போது மிக கவனமாக இரு என்று கற்றுக் கொடுங்கள். வீடு வந்ததும் தினமும் நடப்பது, நடந்தது பற்றி விசாரியுங்கள். அனைவரையும் நேசிக்க வேண்டும். ஆனால், நம்மை யாரும் வஞ்சித்து விடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துங்கள். நாம் தேவனுக்கு எவ்வளவு விசேஷமானவர்கள் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

தெய்வ பயத்திலும், இரட்சிப்பிலும், விசுவாசத்திலும், கற்பிலும், பரிசுத்தத்திலும் தேவநாம மகிமைக்காக வாழும் முறைகளை போதியுங்கள். கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பங்களையும் கிறிஸ்து இயேசுவுக்குள் காத்துக் கொள்வாராக. ஆமென்! அல்லேலூயா!

  

டிசம்பர் 06, 2017

இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி ... பகுதி - 2

Image result for இயேசு தான் கடவுள்

இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி ...
(பகுதி - 2)

உபாகமம்: 6:4-9 - "இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக. இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகளை உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசி, அவைகளை உன் கையின்மேல் அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக; அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாய் இருக்கக்கடவது. அவைகளை உன் வீட்டு நிலைகளிலும், உன் வாசல்களிலும் எழுதுவாயாக."

வெளிச்சத்தில் இருக்கும் நம்மை இருளுக்குள் இழுக்க, நமது தேவனைக்குறித்தும், நமது பரிசுத்த வேதாகமத்தைக்குறித்தும் சந்தேகங்களை எழுப்புவார்கள். நாமோ சத்தியத்தை அறிகிற அறிவில் வளர்ந்து சத்தியத்தில் ஸ்திரமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். நம் தேவனைக் குறித்து அறிகிற அறிவில் வளர வேண்டும். நம்மைச் சார்ந்திருப்போரையும் கிறிஸ்துவை அறிகிற அறிவில் வளரச் செய்து விட்டால் இருளில் இருப்போர் வெளிச்சத்தின் பிள்ளைகளை அணுகும்போது தங்களைக் காத்துக் கொள்வார்கள்.

இயேசு, தான் ஒரு "கடவுள் " என்பதை நிரூபிக்கும் வேத வசனங்களும், விளக்கங்களும்:


யோவான் 13:14  - “ஆண்டவரும் போதகருமாகிய நானே”

 
1. யாருடையபெயரில் க்கள் அனைவரும்
தொழுதுகொள்ளகூடி ருகிறார்கள்? ...   இயேசுவின் பெயரில்

இயேசு கூறினார்: "இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ,…" மத்தேயு 18:20

2.
தொழுதுகொள்ள கூடி வரும் போது யாருடைய
பிரசன்னம் அங்கு இருக்கும்? ...    இயேசுவின்

இயேசு கூறினார்: “இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ,…” அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்." மத்தேயு 18:20

3.
தூதர்களை அனுப்புவது யார்? ... இயேசு

இயேசு கூறினார்: மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; … மத்தேயு 13:41

இயேசு கூறினார்: அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு
புலம்புவார்கள். வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்மத்தேயு 24:30 ,31

4.
தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் யாருக்கு சொந்தம்? ... இயேசுவிற்கு

இயேசு கூறினார்: வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள். மத்தேயு 24:31

5.
இறைவனை பின்பற்றினவர்களோடு முடிவில்லாமல்
யாருடைய பிரசன்னம் இருக்கும்? ... இயேசுவின்

இயேசு கூறினார்: … இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்... மத்தேயு 28:20

6.
சொர்க்கத்தில் இருப்பவர் யார், அங்கிலிருந்து வருபவரும் யார்? ...   இயேசு

இயேசு கூறினார்: பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான
மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. யோவான் 3:13

7.
சொர்க்கத்தில் இருப்பவர் யார்? ...    இயேசு

இயேசு கூறினார்:   நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; …. யோவான் 6:51

இயேசு கூறினார்:   நீங்கள் தாழ்விலிருந்துண்டானவர்கள், நான் உயர்விலிருந்துண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்துண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்துண்டானவனல்ல. : யோவான் 8:23

இயேசு கூறினார்: நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு
உலகத்திலே வந்தேன்; மறுபடியும் உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறேன். யோவான் 16:28

8.
நித்திய வாழ்வு வேண்டுமானால், நாம் யாரிடம் நம்பிக்கை வைக்கவேண்டும்? ...   இயேசுவிடம்

இயேசு கூறினார்: …மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். யோவான் 3:14,15

இயேசு கூறினார்: நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை,….. யோவான் 10:28

9.
யார் மூலமாக இரட்சிப்பு கிடைக்கிறது? ... இயேசு மூலமாக

இயேசு கூறினார்: நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், … யோவான் 10:9

10.
நம்முடைய ஆன்மீக பசியையும் தாகத்தையும் தீர்ப்பவர் யார்? ...  இயேசு

இயேசு கூறினார்: இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான். யோவான் 6:35

11.
கடைசி நாளில் யார் மனிதர்களை உயிரோடு
எழுப்புவார்கள்? ... இயேசு

இயேசு கூறினார்: குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், … கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன். யோவான் 6:40-44

12.
நித்திய வாழ்வின் ஏக்கத்தை (பசியை) தீர்ப்பவர் யார்? ... இயேசு

இயேசு கூறினார்: ஜீவ அப்பம் நானே. யோவான் 6:48

13.
யாருடைய வார்த்தைகள் அழிவதில்லை ? ... இயேசுவின்

இயேசு கூறினார்: வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. மத்தேயு 13:31

14.
நித்திய வாழ்வை தருபவர் யார் ? ... இயேசு

இயேசு கூறினார்: என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான். யோவான் 6:57

இயேசு கூறினார்: ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்யோவான் 8:51

15.
நித்திய ஜீவன் யார்? ... இயேசு

இயேசு கூறினார்: நானேஜீவனுமாயிருக்கிறேன்; யோவான் 14:6

16.
நாம் அவரது பணிக்காகநம்முடைய வாழ்வை இழந்தால், யார் நமக்கு வாழ்வு தருபவர்? ... இயேசு

இயேசு கூறினார்: என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான். மத்தேயு 10:39

17. நாம் உயர்ந்த அன்பை யாரிடம் காட்டவேண்டும்? ... இயேசுவிடம்

இயேசு கூறினார்: தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல. மத்தேயு 10:37

18.
யாரிடம் நித்திய ஜீவ நீரூற்றுக்கள் (ஆன்மா) உண்டு? ... இயேசுவிடம்

இயேசு கூறினார்: வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் யோவான் 7:38

19.
உலகத்தில் ஒளி யார்? ... இயேசு

இயேசு கூறினார்: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன். யோவான் 9:5 , 8:12

20.
பாவங்களிலிருந்து மக்களுக்கு விடுதலை தருபவர் யார்? ... இயேசு

இயேசு கூறினார்: பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான்ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். யோவான் 8:34, 36

21.
பாவங்களை மன்னிக்க யாருக்கு அதிகாரம் உண்டு? ... இயேசுவிற்கு

இயேசு கூறினார்: பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை
நீங்கள் அறியவேண்டும். மத்தேயு 9:6

22.
நித்திய நித்தியமாக வாழ்பவர் யார்? ... இயேசு

இயேசு கூறினார்: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். யோவான் 8:58

23.
உயிர்த்தெழுதலும் வாழ்வுமாக இருப்பவர் யார்? ... இயேசு

இயேசு கூறினார்: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; யோவான் 11:25

24.
ஆண்டவர் யார்? ... இயேசு

இயேசு கூறினார்: நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான். யோவான் 13:13

25.
நம்பிக்கையாளர்களுக்கு சொர்க்கத்தில், யார் இடத்தை ஆயத்தப்படுத்துபவர்? ... இயேசு

இயேசு கூறினார்: …ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். யோவான் 14:2

26.
யார் க்களுக்கு ழியாகஇருக்கிறார்? ... இயேசு

இயேசு கூறினார்: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். யோவான் 14:6

27.
யார் உண்மையாகஇருக்கிறார்? ... இயேசு

இயேசு கூறினார்: நானேசத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். யோவான் 14:6

28.
ல்லனிகளை கொடுக்க (நல்ல செயல்கள் செய்ய) க்களுக்கு சக்தியை கொடுப்பவர் யார்? ... இயேசு

இயேசு கூறினார்: நான் மெய்யான திராட்சச்செடி, …. என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்க மாட்டாதது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனி கொடுக்கமாட்டீர்கள்யோவான் 15:1-4

29.
யாருடையதுணையில்லாமல் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது? ... இயேசுவின்

இயேசு கூறினார்: … என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. யோவான் 15:5

30.
மரணம் மற்றும் பாதாளத்தின் திறவுகோல்களை (சாவியை) கொண்டுள்ளவர் யார்? ... இயேசு

இயேசு கூறினார்: நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். வெளி 1:17, 18

31. யார் மக்களின் உள்ளங்களையும் நினைவுகளையும் அறிந்துள்ளவர்? ... இயேசு

இயேசு கூறினார்: …. நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்….. வெளி 2:23

32.
மக்கள் செயல்களுக்கு ஏற்றபடி பலனைதருபவர் யார்? ... இயேசு

இயேசு கூறினார்: …… அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன்வெளி 2:23

33.
மக்களை நியாயம் தீர்க்க வானத்தில் வரப்போகிறவர் யார்? ... இயேசு

இயேசு கூறினார்: …. அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான். அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனுஷகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்மத்தேயு 26:63,64

34.
ஓய்வு நாளின் ஆண்டர் யார்? ... இயேசு

இயேசு கூறினார்: மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார். மத்தேயு 12:8

35.
உலகம் அனைத்தையும் புதிதாக்கி தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தில் உட்காருபவர் யார்? ... இயேசு

இயேசு கூறினார்: மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது …. மத்தேயு 19:28

36.
தேசங்களை (அனைத்து மக்களை) நியாயம் தீர்க்கப்போகிறவர் யார்? ... இயேசு

இயேசு கூறினார்: அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமை பொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள்.
மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, மத்தேயு 25:31,32

இயேசு கூறினார்: ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார். லூக்கா 21:36

இயேசு கூறினார்: அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல
எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான். யோவான் 5:22,23

இயேசு கூறினார்: நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்யோவான் 10:30

பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான். அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? யோவான் 14:8 ,9

மனித வடிவில் வந்த இறைவன் தான், "இயேசு" என்று ஏன் கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்?

இந்த கோட்பாட்டை கிறிஸ்தவர்கள் புதிதாக கண்டு பிடிக்கவில்லை. இயேசு தானே "இறைவன்" என்பதை பலமுறை சொல்லியுள்ளார்

  யோவான். 10:30 - ல் இயேசு சொல்வதைக் கவனியுங்கள். “நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். இது இயேசு தம்மை கடவுள் என்று சொன்னார் என்பது போல காணப்படாமல் இருக்கிறது. ஆனால் இந்த வாக்கியத்திற்கு யூதர்களின் பிரதிபலிப்பைப் பாருங்கள், நற்கிரியைகளினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை, நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவன் என்று சொல்லி, இவ்விதமாக தேவ தூஷணம் சொல்லுகிறதினாலேயே உன்மேல் கல்லெறிகிறோம்”.

யூதர்கள் இயேசு தன்னை கடவுளென்று சொல்வதாக உணர்ந்து கொண்டார்கள். தொடர்ந்து வருகிற அந்த வசனங்களில் இயேசுகிறிஸ்து, நான் அப்படி சொல்லவில்லை என்று சொல்லவுமில்லை. 

ஆகவே நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்பதின் மூலமாக, தான் கடவுளென்பதை இயேசுகிறிஸ்து அறிவுறுத்துகிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. 

யோவான். 8:58 - ல் இன்னுமொரு உதாரணத்தைப் பார்க்கிறோம். மெய்யாகவே, மெய்யாகவே நான் உனக்கு சொல்லுகிறேன். ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்றார். இந்த இடத்திலும் யூதர்கள் இயேசுவின் மேல் கல்லெறியும்படி கற்களை எடுத்துக்கொண்டார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. அவர்கள் கல்லெறிய முயற்சி செய்தார்கள்.

யோவான்: 1:1 சொல்கிறது. “அந்த வார்த்தை தேவனாயிருந்தது”. யோவான். 1:14 ல் “அந்த வார்த்தை மாம்சமானார்” என்று குறிப்பிடுகிறது. இவைகள் இயேசுவே மாம்சத்தில் வெளிப்பட்ட கடவுள் என்பதைக் குறிப்பிடுகிறது. 

அப்போஸ்தலர்:  20:28 ல் தேவன் தம்முடைய சுய இரத்தத்தினாலே சம்பாதித்து கொண்ட தமது சபையை மேய்ப்பதற்கு என்று எழுதுகிறார். 

சொந்த இரத்தத்தினாலே சபையை யார் விலைக்கிரயமாக வாங்கினார்? 

“இயேசுகிறிஸ்து”. அப். 20:28 ல் தேவன் வாங்கினாரென்று அறிக்கையிடுகிறது. “ஆகவே இயேசுவே கடவுள்”.

இயேசுகிறிஸ்துவின் சீஷனாகிய தோமா “என் ஆண்டவரே! என் தேவனே” என்று யோவான்: 20:28 சொல்லுகிறதைப் பார்க்கிறோம். இயேசுகிறிஸ்து அந்த வார்த்தையை திருத்தவில்லை. 

(தீத்து 2:13) நமது ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்து வருவதற்கு காத்திருங்கள் என்று நம்மை உற்சாகப்படுத்துகிறது (II பேதுரு 1:1). 

எபிரேயர். 1:8ல் பிதாவாகிய தேவன், இயேசுவைக் குறித்து: “தேவனே உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது. உம்முடைய இராஜியத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது” என்று சொல்கிறார்.

வெளிப்படுத்தின விசேஷத்தில் அப்போஸ்தலனாகிய யோவானை நோக்கி, தேவன் ஒருவரையே ஆராதனை செய்வாயாக என்று தேவதூதன் சொல்வதாக பார்க்கிறோம். பரிசுத்த வேதாகமத்தின் பல பகுதிகளில் இயேசுகிறிஸ்து ஆராதிக்கப்படுவதைப் பார்க்கிறோம் (மத். 2:11, 14:33, 28:9, 28:17), லூக். 24:52, யோ. 9:38). அவரை ஆராதித்ததற்காக ஒருவரையும் இயேசு கடிந்துகொள்ளவில்லை. அவர் தேவனாக இல்லாமல் இருப்பாரேயானால், தன்னை ஆராதிக்கக் கூடாதென்று ஜனங்களுக்கு சொல்லியிருப்பார். இவைகள் மட்டுமன்றி, இயேசுவின் தேவத்துவத்தைக் குறித்து, பல வேத வசனங்கள் குறிப்பிடுகிறது.

மிக முக்கியமான காரணமென்னவெனில், இயேசு தெய்வமாக இல்லாவிட்டால், அவர் தெய்வமென்று சொல்லப்படாவிட்டால், அவரது மரணம் முழு உலகத்தின் பாவத்திற்கும், விலைக் கிரயமாக செலுத்தப்பட்டிருக்க முடியாது (I யோ. 2:2). தேவன் மாத்திரமே, இப்படிப்பட்ட நித்திய விலைக்கிரயத்தை செலுத்த முடியும். தேவன் மாத்திரமே உலகத்தின் பாவத்தை சுமந்து (II கொரி. 5:21) மரித்து உயிரோடெழும்ப முடியும். அவர் பாவத்திற்குமேல், மரணத்திற்கு மேல் வெற்றி சிறந்து, தேவனாக நிருபித்தார்.

►இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு மனுகுலத்தின் இரட்சகராகத்தான் வந்தார்.தன்னுடைய தெய்வத்துவத்தை பல இடங்களில் வெளிக்காட்டியுள்ளார்

►இயேசு கிறிஸ்து ஒரேபேறான குமாரன்(3:16)

►இயேசு கிறிஸ்துவிற்க்கு ஜீவனை கொடுக்கவும் எடுக்கவும் அதிகாரம் கொடுக்கபட்டுள்ளது(யோவான் 5:19_23)

►இயேசு கிறிஸ்து என்னை கண்டவன் பிதாவை கண்டான்(யோவான் 14:9)

►ஆபிராகாமிற்க்கு முன்பே இருக்கிறேன் (யோவான் 8:58)

►இயேசு கிறிஸ்து இறுதி நாளின் நியாதிபதியாக இருக்கிறார் (மத்தேயு 25)

►வானத்தில் இருந்து வந்தார்(யோவான் 6:38)

►உலகம் உண்டாவதற்கு முன்பே இருந்தேன் (யோவான் 17:5)

►தேவாலயத்திலும் பெரியவர் (மத்தேயு 24:1)


யோவான் : 10:32,33 - "... நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று சொல்லி, இவ்விதமாக தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் ..."


தொடரும் ...