டிசம்பர் 10, 2014

கிறிஸ்துமஸ் கீத பவணியில்...

                   
கிறிஸ்துமஸ் கீத பவணியில் வாசிக்க வேண்டிய வேத வசனங்கள்


ஏசாயா: 9:6 - "நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோள் மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதான பிரபு எனப்படும்".


மத்தேயு: 1:21 - 23 - "அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில், அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்; தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி அதெல்லாம் நடந்தது. அவன் இதோ , ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்".


எண்ணாகமம்: 24:17 - "ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்"


மீகா: 5:2 - "எப்பிராத்தா எண்ணப்பட்ட பெத்லகேமே, நீ  யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதிநாட்களாகிய  பூர்வத்தினுடையது".


சகரியா: 9:9 - "சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூறு; எருசலேம் குமாரத்தியே கெம்பீரி; இதோ, உன் இராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின் மேலும் கழுதைகுட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்".


ஏசாயா: 11:1,2 - "ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும். ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்".




லூக்கா: 2:10 - 14 - "தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிபுகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையை துணிகளில் சுற்றி, முன்னனையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான். அந்தகணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும்,  பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்".


லூக்கா: 1:32,33 - "அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான்".


ஏசாயா: 7:14 - "ஆதலால், ஆண்டவர்தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்"

டிசம்பர் 05, 2014

கிருபை தாரும் ... கிருபை தாரும்!

புத்தாண்டின் ஆசீர்வாதங்களுக்காக கிருபைகளுக்காக கர்த்தரைத் துதிப்போம்!

(“கிருபை தாரும்! கிருபை தாரும்!” – என்று சொல்லி துதியுங்கள்)


1.   வாக்குத்தத்தங்கள் நிறைவேற

2.   நோய் நொடியின்றி தேவனால் பாதுகாக்கப்பட

3.   வருடம் முழுவதும் மகிழ்ச்சியோடு, செழிப்போடு வாழ

4.   வருடம் முழுவதும் நம் விருப்பங்களை தேவன் நிறைவேற்ற

5.   கடந்த ஆண்டில் நிறைவேறாத நன்மைகள் இவ்வாண்டில் நிறைவேற

6.   இவ்வருடத்திற்குள் வேதத்தை முழுவதும் வாசித்து முடிக்க

7.   நீண்டகால கனவுகள், தரிசனங்கள், விருப்பங்கள் நிறைவேற

8.   குடும்பங்களில் சமாதானம், வளம் பெருக

9.   கடனிலிருந்து முழுமையான விடுதலை பெற

10.  குடும்பத்தின் குறிக்கோள்கள், இலக்குகள் நிறைவேற

11.  குழந்தைகளின் எதிர்காலம், கல்வி, வேலைவாய்ப்பு, திருமண வாழ்வு ஒளிமயமாக

12.  வாதை, தீமைகள், பொல்லாப்புகள் குடியிருப்பை விட்டு விலகியோட

13.  சத்துருவின் எதிரான வல்லமைகள், சூழ்ச்சிகள், சதிகள், அவதூறுகள், நிந்தைகள் அற்றுப்போக

14.  ஒரு வாரம் கூட ஆராதனையை தவற விடாதிருக்க

15.  சபை இலக்குகள், தரிசனங்கள் என் மூலம் நிறைவேற

16.  பிரிந்த உறவுகள் ஒன்று சேர

17.  தாவீதைப்போல வரவர எல்லாவற்றிலும் விருத்தியாக

18.  தேவகிருபையில் அனுதினமும் பலப்பட

19.  பரிசுத்தத்தின்மேல் பரிசுத்தமாக

20.  ஜெபத்திலே உறுதியாக தரித்திருக்க

21.  ஆவியிலே அனலாயிருக்க

22.  சத்தியத்தில் நிலைத்திருக்க

23.  இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாக

24.  பாவத்தை விட்டு விலகியோட

25.  சாபத்திற்கு நீங்கலாக

26.  தேவ பயத்தில் நிலைத்திருக்க

27.  சுவிசேஷத்தை சுமந்து திரிய

28.  கிறிஸ்துவின் அச்சடையாளங்களை தரித்துக் கொள்ள

29.  உலகமெங்கும் சாட்சியாக

30.  தேவ பிள்ளைகளோடு ஐக்கியமாயிருக்க

31.  ஊழியரோடு ஐக்கியமாயிருக்க

32.  குடும்பத்தோடு ஐக்கியமாயிருக்க

33.  கணவன், மனைவி, பிள்ளைகளை நேசிக்க

34.  பெற்றோரை கனப்படுத்த

35.  ஏழைகளை நேசிக்க – உதவிட

36.  பிறர் குற்றம் மன்னிக்க

37.  தேவ சித்தம் நிறைவேற்ற

38.  தாழ்மையை தரித்துக் கொள்ள

39.  ஓய்வு நேரங்களை கர்த்தருக்காய் செலவிட


40.  கொடுப்பதில், தாங்குவதில் சிறந்து விளங்க

புத்தாண்டில் நுழையும் முன் ...

 புத்தாண்டு ஆசீர்வாதங்களுக்காக தேவனைத் துதிப்போம்!

1.   நம் தேசத்தில் அவரது ஆளுகை உண்டாகும்படியாக

2.   நம் தேசத்தில் அவரது சித்தம் நிறைவேறும்படியாக

3.   நம் தேசத்தில் அவரது நாமம் மகிமைப்படும்படியாக

4.   நம் தேசத்தில் அவரது இராஜ்யம் வரும்படியாக

5.   நம் தேசத்தில் சுவிசேஷத்திற்காக திறந்த வாசல் ஏற்படும்படியாக

6.   நம் தேசம் இரட்சிக்கப்படும்படியாக, ஆட்சியாளர்கள் மனந்திரும்ப

7.   நம் தேசம் இயேசுவே தேவன் என்று அறியும்படியாக

8.   கர்த்தரை துதிக்கும் தேசமாக மாறும்படியாக

9.   நம் தேசம் கர்த்தரை அறிகிற அறிவினால் நிரப்பப்படும்படியாக

10.  சமாதானமுள்ள தேசமாக மாறும்படியாக, கிறிஸ்துவுக்கு விரோதமான கிரியைகள் அற்றுப்போக

11.  வறுமை நீங்கி வளம் பெறும் நாடாக மாறும்படியாக

12.  நம் தேசம் தேவ பிரசன்னத்தினால் மூடப்படும்படியாக

அவரே நித்தியானந்தமுள்ள ஏக சக்ராதிபதியும், இராஜாதி இராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும், ஒருவராய் சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும் காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும், நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்! (2தீமோத்தேயு: 6:15,16)

13.  சபைகள் இல்லாத இடங்களில் சபைகள் நிறுவப்படும்படியாக

14.  சொந்த இடமில்லாத சபைகளுக்கு இடங்கள் வாங்கும்படியாக

15.  மிஷினெரிகள் இல்லாத இடங்களுக்கு மிஷினெரிகள் அனுப்பப்படும்படியாக

16.  தரிசனமுள்ள ஊழியர்கள், மிஷினெரிகள் தேசத்தில் பெருகும்படியாக

17.  ஊழியங்களை தாங்குவோர் தேசத்தில் திரளாக எழும்பும்படியாக

18.  தேசத்திற்காக ஜெபிப்போர் திரள் கூட்டம் பெருகும்படியாக

19.  ஆத்துமாதய அறுவடை பணி தீவிரப்படுத்தப்படும்படியாக

20.  தேசத்திற்காக முழங்காலில் நிற்போர் எழும்பும்படியாக

21.  தேசத்தில் மகிமையான எழுப்புதல் உண்டாகும்படியாக

22.  தேசத்தில் தேவனுடைய பலத்த கிரியைகள் வெளியரங்கமாக்கப்படும்படியாக

23.  தேசத்திலுள்ள அனைத்து தேவபிள்ளைகளையும் தேவன் பாதுகாக்கும்படியாக

24.  தேசத்திலுள்ள அனைத்து ஊழியர்களையும் குடும்பங்களையும் பாதுகாக்கும்படியாக

கர்த்தரோ மெய்யான தெய்வம், அவர் ஜீவனுள்ள தேவன் நித்திய ராஜா, அவருடைய கோபத்தினால் பூமி அதிரும். அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்கமாட்டார்கள். வானத்தையும்  பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும், இந்த வானத்தின் கீழும் இராதபடி, அழிந்து போகும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள். (எரேமியா:10:11)

 

25.  திருச்சபைகளில் பரிசுத்த ஆவியானவரின் முழு ஆளுகை உண்டாகும்படியாக

26.  தினந்தோறும் சபைகள் சத்தியத்தில் வளர்ந்து பெருகும்படியாக

27.  திருச்சபைகளில் அற்புத அடையாளங்கள் மூலமாக தேவவசனம் உறுதிப்படும்படியாக

28.  திருச்சபைகள் உயிர்மீட்சி பெற்று எழுப்புதல் அடையும்படியாக

29.  தேவனின் பரிபூரண சித்தம் திருச்சபைகளில் முழுமையாக நிறைவேறும்படியாக

30.  திருச்சபைகளில் ஐந்துவிதமான ஊழியங்கள் நடைபெறும்படியாக

31.  தினந்தோறும் திருச்சபைகள் ஆத்துமாக்களால் நிரப்பப்பட்டு வளர்ந்து பெருகும்படியாக

32.  திருச்சபைகள் இரண்டாம் வருகைக்கு ஆயத்தப்படும்படியாக

33.  திருச்சபைகளின் இலக்குகள், தரிசனங்கள், நோக்கங்கள், திட்டங்கள் நிறைவேறும்படியாக

34.  திருச்சபைகளில் ஒருமனம் ஒற்றுமை, சமாதானம் பெற்று சாட்சியாக விளங்கும்படியாக

35.  திருச்சபை மக்கள் தேவராஜ்ய மனப்பான்மையுடன் செயல்படும்படியாக

36.  திருச்சபைகளில் தேவமகிமை, தேவபிரசன்னம், தேவவல்லமை, இரட்சிப்பு வெளிப்படும்படியாக

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்தாவி நாமத்திலே அவர்களுக்கு ஞாணஸ்நானம் கொடுத்து, நான் உங்களுக்கு கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். இதோ உலகத்தின் முடிவுபரியந்தமும் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன். (மத்தேயு: 28:19,20)

37.  விதைக்கப்படாத இடத்தில் விதைக்கும்படியான தரிசனம் உண்டாகும்படி

38.  சந்திக்கப்படாத ஜனங்களைக் குறித்ததான ஆத்துமபாரம் உண்டாக

39.  அநேகர் மிஷினெரி ஊழியத்திற்கு தன்னை அர்ப்பணிக்க

40.  மிஷினெரி ஊழியத்தைக் குறித்த தரிசனம் பெற்ற திருச்சபைகள் எழும்ப

41.  மிஷினெரி ஊழியத்திற்கு கொடுக்கிற ஜெபிக்கிற ஜனங்கள் எழும்ப

42.  தேவ பிள்ளைகள் ஆத்தும பாரத்தோடு ஊழியம் செய்திட

43.  தேசத்தில் ஜெபவீரர்கள் திரள் திரளாக எழும்ப

44.  ஜெபவீரர்கள் சபை மற்றும் தேசத்தை குறித்த தரிசனம், பெற்றவர்களாய் இருக்க

45.  ஜெபவீரர்கள் தேவனின் இருதய பாரத்தை அறிந்தவர்களாக இருக்க

46.  ஜெபவீரர்களை தேவன் தமது மன்றாட்டின் ஆவியால் நிரப்ப

47.     ஜெபவீரர்கள் மத்தியில் மாபெரும் எழுப்புதல் உண்டாகும்படியாக

48.    தேவனுடைய பரிபூரண சித்தம் சுவிசேஷ ஊழியத்தில் நிறைவேற

குறித்த காலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை (ஆபகூக்: 2:3)

49.  சபையின் தரிசனத்தோடு இணைந்து செயல்படுகிறவர்கள் எழும்ப

50.  சபையின் தரிசனத்தை சுமக்கிறவர்களாயிருக்க

51.  சபையின் தரிசனத்திற்காக பிரயாசப்பட

52.  சபைவளர்ச்சியின் மேல் கரிசனையுள்ளவர்களாயிருக்க

53.  தரிசனம் உண்டாக உபவாசிக்கும் ஜெபவீரர்களை தேவன் எழுப்ப

54.  தரிசனம் உண்டாக விழித்து ஜெபிக்கும் ஜெபவீரர்களை தேவன் எழுப்ப

55.  தரிசனம் உண்டாக ஜாமங்காத்து ஜெபிக்கும் ஜெபவீரர்கள் எழும்ப

56.  தனிநபர் எழுப்புதல், குடும்பத்தில் எழுப்புதல், சமுதாயத்தில் எழுப்புதல் ஏற்பட

57.  தனித்தாள், தெருப்பிரசங்கம், கைப்பிரதிகள் மூலம் ஜனங்கள் சந்திக்கப்பட

58.  சீஷத்துவப் பயிற்சி, ஊழியப் பயிற்சி, மூப்பர் பயிற்சி, வேத பாடம் மூலம் ஆவிக்குரிய வளர்ச்சி பெற

59.  புதிய தரிசனம், புதிய சிந்தை, புதிய நோக்கம், புதிய திட்டம் பெற்றுக் கொள்ள

60.  பரம தரிசனத்துக்கு கீழ்படிகிற தாழ்மைக்காக

கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம் (சங்கீதம்: 100:3)

61.  சபைமேல், ஊழியர்மேல், ஊழியத்தின்மேல் கரிசனை, அக்கறை செலுத்துவோர்கள் எழும்ப

62.  பகுதி நேர மற்றும் முழுநேர ஊழியத்திற்கு அர்ப்பணிக்க

63.  ஆண்கள் ஐக்கியம், பெண்கள் ஐக்கியம் வளர, செயல்பட

64.  வாலிபர் கூட்டம், சிறுவர் ஊழியம் சிறப்பாக நடைபெற

65.  ஜெபக்குழுக்கள், பராமரிப்புக் குழுக்கள் மூலம் மாபெரும் எழுப்புதல் ஏற்பட

66.  ஆவிக்குரிய தலைவர்கள் எண்ணிக்கையில் பெருக

67.  மாணவர் ஊழியம் மூலம் ஆத்துமாக்கள் சந்திக்கப்பட

68.  பின்தொடர் ஊழியம், தனித்தாள் ஊழியம் செய்கிறவர்களை தேவன் எழுப்ப

69.  பிள்ளைகளை ஒப்புக் கொடுக்கும் தாய்மார்கள், கர்த்தர் சொன்னதை நிறைவேற்றும் தகப்பன்மார், ஊழியத்திற்கு உதவிடும் தம்பதிகள் எழும்ப

70.  இசைக்குழு, பாடகர் குழு, ஜெபக்குழு, பணிவிடைக்குழு எழும்ப

71.  இரத்தக்கோட்டை ஜெபம், இரவு ஜெபம், உபவாச ஜெபம், ஜாமக்காரன் ஜெபத்தின் மூலம் எழுப்புதல் அடைய

72.  கிளை சபைகளை நிறுவ, தேவைகள் சந்திக்கப்பட, கிளைசபைகள் வளர

நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுள்ள ராஜனுமாய், தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதா காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென் (1தீமோத்தேயு: 1:17)