செப்டம்பர் 13, 2013

சபையின் அஸ்திபார உபதேசங்கள்

சபையின் அஸ்திபார உபதேசங்கள்: அப்: 2:38 – 47

1.         இயேசுவை விசுவாசித்து, பாவத்திற்கு மனம்திரும்ப வேண்டும்
2.         ஞானஸ்நானம் பெற வேண்டும்
3.         பரிசுத்த ஆவியானவரின் அபிசேகம்
4.         மாறுபாடுள்ள இந்த சந்ததியை விட்டு விலகி  பரிசுத்தமாக வாழ்தல்
5.         அப்போஸ்தலர்களுடைய உபதேசம்
6.         அந்நியோன்யத்திலும் – சபை மக்களோடு ஐக்கியம்
7.         அப்பம் பிட்குதல் – தேவனோடு ஐக்கியம்
8.         ஜெபம் – பிறருக்காக மன்றாடுதல்
9.         ஊழியம் – அற்புத அடையாளங்களால் நற்செய்தி அறிவித்தல், தேவனை மகிமைப்படுத்.துதல்
10.       சபையில் சேர்க்கப்படுதல் – தேவனை துதித்து ஆராதித்தல்.

ஞானஸ்நானம் எடுத்த பின்பு செய்ய வேண்டியவைகள்


1.         தினமும் ஜெபம் பண்ண வேண்டும். நன்றி சொல்லுதல், நமது தேவைகளுக்காக அவரை நம்பியிருத்தல், பிறருக்காக மன்றாடுதல், அவர் சித்தம் அறிய

2.         தினமும் வேதம் வாசித்தல். தேவன் மனிதர்களுக்கு அருளிய மிக பெரிய பொக்கிஷம் பரிசுத்த வேதாகமம்.
3.         வாரந்தோறும், ஞாயிறு ஆராதனையில் பங்கெடுத்து, அவரை மகிமைப்படுத்த வேண்டும்.
4.         அவர் நமக்கு கொடுத்திருக்கும் வரங்கள், தாலந்துகள், திறமைகளை அவருடைய சரீரமாகிய சபையின் ஆசீர்வாதத்திற்காக பயன்படுத்த வேண்டும.
5.         பராமரிப்பு குழுவில் அங்கம் வகிக்க வேண்டும்.
6.         வேத பாட வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும்
7.         சபையின் அங்கத்தினராக மாறிவிடுகிறீர்கள்.சபையின் அனைத்து காரியங்களுக்கும் பொறுப்பானவர்கள். (தேவனுடைய நாமம் உங்களால் வீணிலே வழங்கப்படக் கூடாது. சபைக்கு உத்திரவாதமுள்ளவர்களாய் நடந்து கொள்ள வேண்டும்)
8.         திருவிழாக்களில் கலந்து கொள்வதில் மிக அதிக கவனம் தேவை.
9.         தசமபாகம் கொடுக்க வேண்டும். நம்முடைய வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை கொடுக்க வேண்டும்.
10.       தேவனுக்கு பயந்து நடக்க வேண்டும். அவரை நேசித்து ஆராதிக்க வேண்டும், அவரை பிரியப்படுத்த வேண்டும். அவர் சித்தம் செய்ய வேண்டும்.

சீஷர்களுக்குரிய அடையாளங்கள்.

மத் 28:18-20 சீஷராக்குங்கள்

1.    (லூக் 14:26) யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

2.    (லூக் 14:27) தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
3.    (லூக் 14:33) அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
4.    (யோவா 8:31) இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்
5.    (யோவா 13:35) நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.
6.    யோவா 15:8) நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதனால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்.
7.    (அப் 14:22) சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவா;களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.
8.    (லூக் 6:40) சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல, தேறினவன் எவனும் தன் குருவைப்போலிருப்பான்.
9.    (மத் 24:13) முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
10.   (அப் 11:26) சீஷர்களே கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

சபை வளர்ச்சி அடைய

 

திருச்சபை வளர்ச்சி:


திருச்சபை வளர வேண்டிய பகுதிகள் ஆவிக்குரிய காரியங்களில் வளர வேண்டும் எண்ணிக்கையில் வளர வேண்டும். 
ஆத்தும ஆதாயம் பொருளாதாரத்தில் வளர வேண்டும் ஊழியம் செய்வதில் வளர வேண்டும். 
கிளை சபைகள் உருவாக வேண்டும் மிஷனெரி ஊழியங்களுக்காக ஜெபிக்க, கொடுக்க வேண்டும். 
முழு நேர ஊழியர்கள் உருவாக வேண்டும்


திருச்சபையில் காணப்பட வேண்டிய அம்சங்கள்:


1. ஆராதனையில் பலமாக இருக்கிற திருச்சபை    பெருகும் 
2. ஐக்கியத்தில் அனலாக இருக்கிற திருச்சபை வளரும் 
3. சீஷத்துவத்தில் ஆழமாக இருக்கிற திருச்சபை வளரும்
 4. நற்செய்தி பணியில் பெரிதாக இருக்கிற திருச்சபை பெருகும் 
5. சேவை செய்வதில் அகலமாக இருக்கிற திருச்சபை வளரும்

ஒரு திருச்சபையின் மதிப்பீடுகள்:


* விதிமுறைகள் அல்ல உறவுமுறைகள் முக்கியம் 
* மக்கள் விருப்பம் அல்ல தேவ சித்தம் முக்கியம் 
* சபைக்கு வருகிறவர்கள் அல்ல சீஷர்கள் முக்கியம் 
* எண்ணிக்கை அல்ல மறுரூபம் முக்கியம்
 * மனித பாரட்டுகள் அல்ல தேவ மகிமை முக்கியம்
 * திறமைகள் அல்ல கிருபைகள் 
* ஆளுகை அல்ல அன்பு



செப்டம்பர் 01, 2013

இது எப்படியிருக்கு?

Untitled  



கண்டதைக் கற்கப் பண்டிதன் ஆவான்



கண்டதைக் கற்க எப்படி பண்டிதன் ஆக முடியும்? 

மாணவர்கள் கண்டதைக் கற்கிறார்களே! பண்டிதர் ஆகவில்லையே!

”கண்டு அதைக் கற்கப் பண்டிதன் ஆவான்.”

இன்ன நூல்களைக் கற்க வேண்டும் என்று தேர்ந்தெடுத்துக் கற்றால் பண்டிதன் ஆக முடியும் என்று கருத்துரைக்கிறது இப்பழமொழி.


"உம்முடைய கட்டளைகளை நான் கைக் கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைப் பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கிறேன்" (சங்: 119:100)

"நீங்கள் வளரும்படி, புதிதாய் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்" (1பேதுரு: 2:3).

"இவைகளால் ஞானத்தையும், போதகத்தையும் அறிந்து, புத்திமதிகளை உணர்ந்து, விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப் பற்றிய உபதேசத்தை அடையலாம். இவைகள் பேதைகளுக்கு வினாவையும், வாலிபருக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும். புத்திமான் இவைகளைக் கேட்டு அறிவில் தேறுவான், விவேகி நல்லாலோசனைகளை அடைந்து,  நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும், ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் உரைத்த புதைபொருள்களையும் அறிந்து கொள்வான். கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்..." (நீதி: 1:2-7)

--அப்பா தான் என் பெலன்--



வயதான அப்பாவும் மகனும் தினசரி காலை முதல் மாலை வரை வயலில் வேலை செய்வர்.

அப்பா முன்கோபி.

சிறு தவறுகளுக்கு எல்லாம் மகனை அடிப்பார்.

ஆனால் மகன் எதிர்த்துக் கூட பேச மாட்டார்.

ஒரு நாள் கோபத்துடன் தந்தை மகனை அடித்த போது, மகன் கண்ணீர் விட்டு அழுதார்.

''இத்தனை நாள் இல்லாது இன்று மட்டும் அழுத காரணம் என்ன?'' என்று தந்தை கேட்ட போது,

மகன் சொன்னார்,

''அப்பா, இது வரை நீங்கள் அடித்த போதெல்லாம் வலி அதிகமாக இருக்கும்...

நானும் பொறுத்துக் கொள்வேன்...

இன்று நீங்கள் ஓங்கி அடித்தும் வலிக்கவில்லை...

உங்கள் உடம்பில் பெலன் குறைந்து விட்டதே என்று எண்ணித் தான் அழுதேன்.
-- Selected--

பண்டிகையும் கிறிஸ்தவமும் - 4


பண்டிகை கொண்டாடலாம்  என்பதற்கு வேத ஆதாரம்:
(எண்: 10:10, யோவேல்: 2:15,16)

வேதத்தை வாசிக்கும்போது - ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒவ்வொருமுறையும் சுவிசேஷம் அறிவிக்கும்போதும் பண்டிகை நாட்களில்தான் அதிகம் அறிவித்தார் என நாம் அறியலாம். பண்டிகைக்கு முன்பாகவே அவர் அவ்விடத்திற்கு வருவதைக் காணமுடியும். (யோவா: 5:1). இயேசு பஸ்கா பண்டிகையை ஆசரித்தார். (மத்: 26:17, மாற்: 14:12, லூக்: 22:9, 2:41,43,   22:15, யோவா: 2:13, 6:4,  12:1,15,  7:10) இயேசு பண்டிகைக்கு இரகசியமாக போனார். யோவா: 7:37 - பண்டிகையில் இயேசு சுவிசேஷம் அறிவித்தார். யோவா: 10:22,23 - ல் - இயேசு தேவாலயப் பிரதிஷ்டை பண்டிகையில் கலந்து கொண்டார்.

அப்.பவுல் பண்டிகையில் கலந்து கொள்ள விருப்பமாயிருந்தான். (அப்: 18:20,21). பவுல் பெந்தேகொஸ்தே பண்டிகையில் கலந்து கொள்ள எருசலேமிற்கு செல்ல தீவிரப்பட்டான். (அப்: 20:16). "ஆதலால், பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்." (1கொரி: 5:8).

மேலும் பவுல் கூறும்போது,  பண்டிகை கொண்டாடலாம். ஆனால்,  பிறர் குற்றப்படுத்தும்படியான வகையில் கூடாத என்கிறார். "ஆகையால், போஜனத்தையும், பானத்தையும் குறித்தாவது, பண்டிகைகளையும், மாதப் பிறப்பையும் ஓய்வு நாட்களையுங் குறித்தாவது, ஒருவரும் உங்களை குற்றப்படுத்தாதிரப்பானாக" (கொலோ: 2:16).

நாகூம்: 1:15 - "...யுதாவே உன் பண்டிகைகளை ஆசரி". 

எசேக்: 45:17, 21,23,25 - குறிக்கப்பட்ட பண்டிகைகளை ஆசரிக்கலாம். 

ஏசா: 33:20 - "நம்முடைய பண்டிகைகள் ஆசரிக்கப்படும் சீயோனை நோக்கிப்பார்". 

சங்: 83:3 - "மாதப்பிறப்பிலும், நியமித்த காலத்திலும், நம்முடைய பண்டிகை நாட்களிலும் எக்காளம் ஊதுங்கள்". 

எஸ்தர்: 9:17,18 - "...சந்தோஷப்படுகிற பண்டிகை நாளாக்கினார்கள்". 

நெகே: 8:18 - "...ஏழு நாள் பண்டிகையை ஆசரித்தார்கள்".

(எஸ்றா: 6:22, 3:5, 2நாளா: 35:17, 30:13,22, 8:13, 7:8,9, 2:4, 1ராஜா: 8:65, 12:32, உபா: 16:10,15,16, யாத்: 5:1, 10,9, 23:14-16, யாத்: 32:5, 34:18,22, லேவி: 23:6, எண்: 28:17, லேவி: 23:34, எண்: 29:12, உபா: 16:13, எண்: 10:10)

காலக்கிரமத்தின்படி தீர்க்கதரிசிகள்


1. ஒபதியா - கி.மு.845 - இவன் பரியாசக்காரனை கடிந்து கொண்டவன்

2. யோவேல் - கி.மு.850 - இவன் பெந்தேகொஸ்தே தீர்க்கதரிசி

3. யோனா- கி.மு. - 800 - இவன் முழு உலகத்திற்கும் தீர்க்கதரிசியாக இருந்தான்

4. ஆமோஸ் - கி.மு. 787 - இவன் நீதியின் தீர்க்கதரிசி

5. ஓசியா - கி.மு. - 785 - இவன் அன்பின் தீர்க்கதரிசி

6. மீகா - கி.மு. - 740 - இவன் ஏழைகளின் தீர்க்கதரிசி

7. நாகூம் - கி.மு. - 700 - இவன் ஒரு கவிஞன்

8. செப்பனியா - கி.மு. - 630 - இவன் ஒரு மேடைப் பேச்சாளான்

9. ஆபகூக் - கி.மு. - 627 - இவன் ஒரு தத்துவ மேதை

10. ஆகாய் - கி.மு. - 520 -  இவன் ஒரு தேவாலய தீர்க்கதரிசி

11. சகரியா - கி.மு. - 520 - இவன் ஒரு தரிசன / ஞான தீர்க்கதரிசி

12. மல்கியா - கி.மு. - 450 - இவன் ஒரு விரிவுரையாளன்

ஆகஸ்ட் 31, 2013

பண்டிகையும் கிறிஸ்தவமும் - 3


பண்டிகை கொண்டாட வேண்டிய அவசியமென்ன?:

இன்றை சூழ்நிலையில் இதை சற்று சிந்தித்து பார்ப்போம். இன்று இருக்கிற பெந்தேகொஸ்தே ஊழியக்காரர்கள் - "சினிமா பார்க்கக் கூடாது, கேளிக்கை கூடாது, வீண்பொழுது போக்குக் கூடாது, நகை போடக் கூடாது என சபைமக்கள் நடுவே போதிப்பது சரிதான். தவறல்ல. ஆனால், அதேசமயம், அதற்கான மாற்று வழிகளையும் சிந்தித்து செயல்பட்டால் நல்லது.

அதாவது சபையில் வருகிறவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள் அல்ல. இந்துக்கள் மற்றும் புறஜாதியினரே. இவர்கள் இந்த கேளிக்கைகளை உடனே விட்டுவிடவும் மாட்டார்கள். அப்படியானால் அவர்களுக்கு ஒரு சந்தோஷமான நிகழ்ச்சி ஒன்று வேண்டும். (அதற்காக புறஜாதிய வழக்கப்படி அவர்களைப்போல  நாம் கொண்டாட இயலாது. தேவன் எதை அனுமதித்திருக்கிறாரோ அதைத்தான் நாம் செய்ய வேண்டும்) நாம் வாழ்வதோ புறஜாதியார் மத்தியில்தான். நம்மைச் சுற்றிலும் அவர்கள்தான் இருக்கிறார்கள்.  அவர்கள் கொண்டாடுகிற விழாக்களை நம்மவர்கள் காணத்தான் செய்கிறார்கள்.

விக்கிரகங்களை தொழுதுகொள்ளும் மக்கள் அவைகளால் ஒரு பலனுமில்லை என அறிந்திருந்தும் அதை அவர்கள் கொண்டாடி வருகின்றனர். ஜீவனுள்ள தேவனை நாம் கொண்டாடக் கூடாது? என நம்மக்கள் நினைக்கத்தான் செய்வார்கள். இதன் விளைவுகளை பழைய ஏற்பாட்டு சம்பவங்களில் நாம் காண்கிறோம். (யாத்திராகமம்: 32:4,5).

ஜனங்களின் மனநிலையை அறிந்த தேவன் - இவர்கள் அந்நிய தேவர்களை நாடி சோரம் போகக் கூடாது என்பதற்காகத்தான் மாற்று ஏற்பாடாக - தேவன் பண்டிகைகளை ஏற்படுத்தினார் என கருதுகிறேன். வாசித்துப்பாருங்கள்: (யாத்திராகமம்: 34:22,23, உபாகமம்: 16:16, யாத்திராகமம்: 23:17,13,14).

நமக்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிறு ஆராதனை ஒரு பண்டிகை போலத்தான். சிறப்பு தினங்கள், வாலிபர் கொண்டாட்டம், நற்செய்தி கொண்டாட்டம், விடுதலைப் பெருவிழாக்கள், குடும்ப ஆசீர்வாத கொண்டாட்டம், சிறப்பு உபவாசக் கூடுகை, சிறப்பு முகாம்கள், கருத்தரங்குகள், ஜெப முகாம், படைமுயற்சி கூட்டங்கள் ... போன்ற எத்தனையோ காரியங்கள் நமக்குண்டு. அடிக்கடி அதையெல்லாம் பண்டிகை கொண்டாட்டங்களைப்போல உற்சாகப்படுத்தி ஆத்துமாதாயம் செய்ய வேண்டும்.

பண்டிகையும் கிறிஸ்தவமும் - 2


பண்டிகையின் நோக்கம்: 

பழைய ஏற்பாட்டுக் காலங்களில் இஸ்ரவேல் ஜனங்களுக்கு பிதாவாகிய தேவன் பஸ்கா என்னும் பண்டிகையை தந்தார். இதை அவர்கள் தலைமுறை தலைமுறைதோறும் கொண்டாடி ஆசரித்து வந்தனர். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் பஸ்காவை ஆசரித்தார். (மாற்கு: 14:12, லூக்கா: 22:1,8@ 2:41,42, 22:15 மத்தேயு: 26:17,  யோவான்: 2:13, 12:1).

பிதாவாகிய தேவன், "...நீ வருஷந்தோறும் குறித்த காலத்தில் இந்த நியமத்தை ஆசரித்து வருவாயாக" (யாத்திராகமம்: 13:10) என கூறினார். இதனால், இவர்கள் பஸ்கா பண்டிகையை வருஷந்தோறும் கொண்டாடி வந்தனர்.

"பிற்காலத்தில் உன் குமாரன்: இது என்ன என்று கேட்டால், நீ அவனை நோக்கி: கர்த்தர் பலத்த கையினால் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்..." "கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதற்கு, இது உன் கையில் அடையாளமாகவும், உன் கண்களின் நடுவே ஞாபகக் குறியாகவும் இருக்கக்கடவது என்று சொல்வாயாக என்றார்" (யாத்திராகமம்: 13:14-16)

எனவே, தேவன் கொண்டாடச் சொன்ன ஒவ்வொரு பண்டிகையிலும் தேவனுடைய வல்லமையும், தம்முடைய தேவ ஜனங்களுடைய மீட்பும், அதை அவர்கள் நினைத்து நன்றி செலுத்துதலும், கொண்டாட்டமும் இருக்கும். பஸ்கா பண்டிகை மட்டும் அல்ல, புரிம் பண்டிகையும் தேவன் அவர்களுக்கு கொடுத்த மீட்பை வெளிப்படுத்துகிறது. (எஸ்தர்: 9:21,22).

ஆகவே, பண்டிகையின் நோக்கம்:

தேவன் தம்முடைய ஜனங்களுக்கு கொடுத்ததான மீட்பு, ஆசீர்வாதம் ஆகியவற்றை நினைத்து, தேவனுக்கு நன்றி செலுத்தி, அதை நினைவு கூர்ந்து ஆராதிப்பதாகும். அதுமட்டுமல்ல, நம்முடைய பிள்ளைகளுக்கும், வருங்கால சந்ததிகளுக்கும் தேவனுடைய மீட்பையும், அவரது வல்லமையும் வெளிப்பட, அதை அவர்களும் அறிந்து தேவனை நோக்கி ஜெபிக்க, துதிக்க ஏதுவாகும்.

பண்டிகையும் கிறிஸ்தவமும் - 1


பண்டிகை , திருவிழா ஆகியவற்றிற்கு எபிரேய மொழியில் "ஹக்" (Hag) என்று பதம் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு "விருந்து" என பொருள்படும். விழாக்கள் அனைத்தும் விருந்துண்ணும் பழக்கமா இருப்பதனால் இப்படி அறியப்பட்டிருக்கலாம். (சகரியா: 8:19 ).

இஸ்ரவேலரிடையில் பலவகையான திருவிழாக்கள் காணப்பட்டன. பெரிய விழாக்களுக்கு முன்பு உபவாசித்தலும் (நியாயதிபதிகள்: 26,27 அதிகாரங்கள், 1சாமுவேல்: 7:5,6, 2ராஜாக்கள்: 19:1-17, எரேமியா: 36:4-6,) ,  விழாக்களில் பலியிடுவதும் (1சாமுவேல்: 7:16, 2 சாமுவேல்: 23:16,17) முக்கிய அம்சங்களாகும்.

இஸ்ரவேலரிடையில் காணப்பட்ட விழாக்கள் யாவும் மூன்று வகையாகப்  பகுக்கப்பட்டன. அவை:

1. திருநூல் சட்ட ஒழுங்கிற்குட்பட்டவை: (Canonical Festivals)

ஓய்வுநாள்,  அமாவாசை, ஏழாவது அமாவாசை, ஏழாவது ஆண்டு, பெந்தெகோஸ்தே அல்லது ஐம்பதாவது ஆண்டு.

2. வாழ்க்கை வழக்கிலுள்ளவை: (இவை புண்ணிய யாத்திரைக்குரியது)

பஸ்கா, புளிப்பில்லா அப்பப் பண்டிகை, வாரங்களின் விழா, கூடாரப் பண்டிகை ஆகியவை.

3. திருநூல் சட்ட ஒழுங்கிற்கு வெளியிலுள்ளவை:

பிரதிஷ்டை விழா, புரீம் விழா, நியாயப் பிரமாண விழாக்கள் முதலியவை:

மார்ச் 27, 2013

நிக்கொலாய் மதஸ்தர்

.

 வெளி 2:6, 15 என்னும் இரண்டே வசனங்களில் மட்டும் இந்த கூட்டத்தாரைப்பற்றி சொல்லப்பட்டுள்ளது. எபேசு, பெர்கமு என்னும் சபைகளுக்கு சொல்லப்பட்ட செய்தியில் நிக்கொலாய் மதஸ்தர் பற்றி வாசிக்கிறோம். யோவான் எழுதிய காலத்தில் இருந்தவர்களுக்கு யார் இவர்கள் என்று நிச்சயமாக தெரியும் என்ற காரணத்தினால் அவர்கள் எந்த ஊரில் இருந்தனர் என்று யோவான் சொல்லவில்லை.

அவர்கள் யார்? அவர்களுடைய பழக்கங்கள் என்ன? ஏன் தேவன் அவர்களை வெறுத்தார்?
அப்போஸ்தலர்களின் காலத்தில் அன்றாட விசாரணை செய்ய எழுபது (70) பேரை சீஷர்கள் நியமித்தனர். இவர்களில் ஒருவன் நிக்கொலா (அப் 6:5) இரத்த சாட்சியாய் மரித்த ஸ்தேவானும் இந்த எழுபது பேர்களில் ஒருவன். ஆனால் இந்த வசனத்தில் நற்சாட்சி பெற்ற ஆட்களில் ஒருவன்தான் இந்த நிக்கொலா என்பதால் நமக்கு இவரா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. வரலாற்றில் எத்தனையோ வைராக்கியமான போதகர்கள் பின்மாற்றம் அடைந்து போனதையும் காண்கிறோம். இந்த பெயரை இவர் கொண்டிருந்ததால் சிலர் இவர்தான் என்று குழப்பும்படி சொல்கின்றனர். இவர் ஸ்தேவானைப்போல பரிசுத்த ஆவியினால்லும் ஞானத்தினாலும் நிறைந்தவர் என்பதால் இவர் என்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

அப் 2:6ல் சொல்லப்பட்ட நிக்கொலா என்பவர் இந்த இயக்கத்திற்கு எந்த தொடர்பு அற்றவராக இருப்பினும், நிக்கொலா என்ற பெயரை உடைய யாரோ தலைமை வகித்திருந்தார்கள் என்பதில் ஐயம் இல்லை. Nicolaitan என்பதில் Nikan + laos : இதற்கு conquer (வெற்றிபெறு) மற்றும் people (ஜனங்கள்) என்று பொருள் என்று கிரேக்க சொல்-வரலாற்றில் (etymology) காணலாம் என்பதாக வேதாகமக ஆராய்ச்சி வட்டங்களில் சொல்லப்படுகிறது; இதில் இந்த இயக்கம் பேராயர்களுக்கு (clergy) சாதகமாக மற்றவர்களை அமுக்கி/மட்டம் தட்டி வைத்ததாகவும் விவாதம் உள்ளது. இப்படியான செய்தியை நவீன ஆயர்கள் சொல்கின்றனர்; முதலாம் நூற்றாண்டில் இப்படிப்பட்ட ஒரு செய்தி-தகவல் இல்லை. மேலும் சொல்-வரலாற்றை வைத்து வார்த்தைக்கு அர்த்தம் கண்டு பிடிப்பதிலும் ஆபத்துகள் உள்ளன. பைபிளில் (வெளிப்படுத்தலில்) இப்படிப்பட்ட செயலை வலியுறுத்தி வேறு வசனங்களும் இல்லை.

பைபிளில் ஒரு ஆதாரம் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இந்த நிக்கொலாய் மதஸ்தர் என்பவர்கள் பற்றி சொல்லுவதற்கு முன்பு பிலேயாம் என்பவனின் போதகத்தை பின்பற்றியவர்கள் பற்றி சொல்லி பின்பு "அப்படியே நிக்கொலாய் என்னும் கூட்டத்தாரை" (வெளி 2:14-15) என்பதில் ஒரு தொடர்பைக் காணலாம். யூதர்களில் ரபீ என்பவர்கள் சொல்வதுபோல்
நிக்கொலா என்ற வார்த்தையானது பிலேயாம் என்பதின் கிரேக்க வார்த்தை என்பதற்கான சாத்தியம். (எப்படி மல்லிகா, Jasmine இரண்டும் வேறு பெயராயிருப்பினும் அர்த்தம் ஒன்றுபோல) இது முதலாம் நூற்றாண்டின் காலத்துக்கும் இந்த வசனத்துக்கும் பொருந்துகிறது என்பது ஒருபார்வை. எனவே இக்கூட்டத்தாருக்கும் பிலேயாமைப்பற்றி சொல்லப்பட்ட வசனத்துக்கும் ஏதோ சம்பந்தம் உள்ளது.

யோவான் வெளி 2 ல் பிலேயாம் என்பவரை இரண்டு பிரச்சனைக்குரியவராக காட்டுகிறார்.

1 - விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டவைகளை புசிப்பது.
2 - வேசித்தனம்.

ஆதி சபைகளுக்கு பெரிய பிரச்சனையானது இந்த அந்நியதேவர்களின் வழிபாட்டுடன் சற்றே அநுசரித்து போன ஜனங்களாகும். அப் 15:20, 29 மற்றும் 1 கொரி 8--10 ஆகியவற்றில் பவுல் இதைப்பற்றி குறிப்பிடுகிறார். பவுல் மற்றும் யோவான் ஆகிய இருவரும் விக்கிரகங்களுக்கு படைத்தவைகள் குறித்து சொல்கின்றனர். பவுல் கடையில் விற்பதை வாங்கி புசிக்கலாம் ஆனால் விக்கிரககோவில்களுக்குள் செல்லாதே என்கிறார்.
பாலியல் பிரச்சனை என்பது சற்றே கடினமான ஒன்று. இதை வெளி 2:20,22-லும் யேசெபேல் என்பவளை குறித்து சொல்லப்பட்டுள்ளது . பழைய ஏற்பாட்டிலும் இந்த பெயரைக் காணலாம் (ஆகாபின் மனைவி). ஆனால் வெளி 2:20 ல் சொல்லப்பட்டுள்ள யேசெபேல் அவள் அல்ல, இங்கே சொல்லப்பட்டவள் தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று சொல்லிக்கொண்டாள். இரண்டாவதாக அவள் தேவ ஊழியர்களை வேசித்தனம் செய்யவும், விக்கிரகங்களுக்கு படைத்ததை புசிக்கவும் செய்தாள் என்று பார்க்கிறோம். மனந்திரும்ப தேவன் தவணை கொடுத்தார் அவளோ திரும்பவில்லை. இதை 1 கொரி 5:1; 6:12-20 மற்றும் எபி 13:4 ல் பவுலும் சுட்டிக்காட்டுகிறார்.

பழைய ஏற்பாட்டில் யேசெபேல் ஆகாபுக்கு பாலியல் துரோகம் செய்யவில்லை, மாறாக இஸ்ரவேல் ஜனங்களை பாகலை வணங்கும்படி செய்தாள்.
பழைய ஏற்பாட்டில் தேவனைவிட்டு வேறு தேவர்களை பின்பற்றுவதை தேவன் வேசித்தனம் என்று சொல்கிறார். (என் ஜனம் சோரம் போயிற்று).

பேயோரின் ( Peor) கூட்டத்தாரிடத்தில் (பிலேயாம் - எண்: 25:1-18) காணப்பட்ட பாவம் என்னவெனில் மோவாபியர் (மீதியானியர்) பெண்கள் இஸ்ரவேல் ஜனங்களை அந்நிய தேவர்களை வணங்கும்படியும், அவைகளுக்கு படைத்ததை புசிக்கும் படியும் செய்தனர். இஸ்ரவேல் ஜனங்கள் வேசித்தனம் செய்தனர்.

இவைகளை பார்க்கும்போது, நிக்கொலா என்னும் கூட்டத்தார் தேவனுடைய ஜனங்களை அன்று காணப்பட்ட கலாச்சாரத்துடன் பிணைக்கும்படி, கொஞ்சம் கலாச்சாரத்துடன் அநுசரித்து போகலாம் (compromise) என்று புகுத்திய கூட்டத்தாராக காணமுடிகிறது. வேறு விதத்தில் சொல்லப்போனால், தேவன் ஒருவரை வணங்குவதை விட்டுவிட்டு, மற்ற சடங்கு சம்பிரதாயங்களில் பங்கு கொண்டால் தவறல்ல என்றும், தேசிய சங்கங்கள் மற்றும் அவர்களின் வழிபாடுகளுடன் சற்றே ஒத்துபோகலாம் என்றும் போதித்திருக்கின்றனர். இப்படிப்பட்ட போதனைகளில் வேசித்தனமும் அடங்கியிருந்தது. இதை யோவானிடம் இயேசு சொல்லும்போது அந்த சபையின் மேல் பிரியப்படாமல் அதின்மேல் வரவிருக்கும் நியாயத்தீர்ப்பைக்குறித்து சொல்லுகிறார்.

இன்றும் உலகில் சபைக்கு சபை வேறுபாடுகள் காணப்படுகின்றன.
எனவேதான் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். உலகின் ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் ஒரு விக்கிரகமான காரியம் உண்டு.

இன்றும் நிக்கொலாய் கூட்டத்தார் வேறு பெயர்களில் வாழ்கின்றனர். இவர்கள் வேதபுரட்டர்களாயிருந்து, இது செய்தால் தவறல்ல, சரிதான் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட புரட்டல்களை இயேசு ஒத்துக்கொள்ளமாட்டார். அவைகள் நியாயத்தீர்ப்பினை அடையும்.

நன்றி:  http://tamilbibleqanda.blogspot.com

மார்ச் 18, 2013

மத்தேயு சுவிசேஷம்




ஆசிரியர்:    மத்தேயு

மத்தேயு வரி வசூலிக்கும் பிரிவைச் சார்ந்தவன்.
12 அப்போஸ்தலரில் ஒருவன் - மத்தேயு: 9:9-13.
நல்ல எழுத்தாளன் - மத்தேயு: 10:3

மத்தேயு இதை எழுதினான் என்று கி.பி.365 ல் வாழ்ந்த எசுபியஸ்; கி.பி. 100 ல் வாழ்ந்த பாப்பியஸ் மற்றும் 2 ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஐரேனியு போன்ற சபை பிதாக்கள் கூறுகின்றனர். இது முதலாவது அரமேயு பாஷையில் எழுதப்பட்டு பின்னர் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது.

எழுதப்பட்ட காலமும் இடமும்:

கிறிஸ்தவர்களின் முதலாம் சிதறடிப்புக்கு முன்பு (அப்: 8:4) இது எழுதப்பட்டிருக்க முடியாது. கி.பி. 70 ல் எருசலேம் அழிக்கப்பட்ட பின்பும் இது எழுதப்பட்டிருக்க முடியாது. ஏனென்றால், எருசலேமின் அழிவு பற்றி (மத்: 24:1-28) தீர்க்கதரிசனம் இதில் இருக்கிறது. 

எனவே, கி.பி.70 க்கும் இடையில் கி.பி.68 ல் இது எழுதப்பட்டிருக்க வேண்டும். அந்தியோகியாவில் வைத்து இது எழுதப்பட்டிருக்க வேண்டும்.

யாருக்கு எழுதப்பட்டது?:

 யூத மார்க்கத்தோடு இணைந்த ஒரு சபைக்கு எழுதப்பட்டது. முக்கியமாக சீரிய யூத சபைக்கு எழுதப்பட்டது எனலாம்.

எழுதப்பட்டதின் நோக்கம்:

நசரேயனாகிய இயேசு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியா மற்றும் இஸ்ரவேலின் ராஜா என்பதை நிரூபிக்க இது எழுதப்பட்டது. பழைய ஏற்பாட்டு மேற்கோள்கள் சுமார் 60 இதில் உள்ளது.

கருப்பொருள்: 

மேசியாவாக, இஸ்ரவேலின் இராஜாவாக வந்த இயேசுவின் முதல் வருகையும் அவர் நிராகரிக்கப்படுதலும்.

திறவுகோல் வசனம்:

மத்தேயு: 1:1 - தாவீதின் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாறு.
மத்தேயு: 23:37-39 - இயேசு கிறிஸ்து ஆபிரகாம் வம்சத்தில் வந்தார்.
"எருசலேமே! கோழி தன் குஞ்சுகளை சேர்த்துக் கொள்வதுபோல் உன்னை சேர்த்துக் கொள்ள நினைத்தேன்."

திறவுகோல் வார்த்தை:

நிறைவேறிற்று -  17 முறை வருகிறது.

தேவனுடைய இராஜ்யம் -  32 முறை வருகிறது.

பரலோக ராஜ்யம் - என்பது மத்தேயுவில் மட்டும் விசேஷித்தவிதமாக வருகிறது. ஏனெனில், யூதர் தேவனுடைய ராஜ்யம் பூமியில் அமைக்கப்படும் என்று எதிர்பார்த்தனர். அதாவது பரலோகம் பூமியில் இறங்கி வந்து ஆட்சி செய்யும் என்பது யூதரின் எதிர்பார்ப்பாகும்.

ஆனால், மேசியாவை புறக்கணித்தபோது தேவனுடைய இராஜ்யம் பின்னால் வரக்கூடிய ஒன்று என நினைத்தனர். அது தற்போது இயேசுவை ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவர் இதயத்திலும் இரகசியமாக உள்ளே இருக்கிறது என்ற கருத்து சொல்லப்பட்டது.